ரஜினி, அஜித்தை தொடர்ந்து விஜய்யை திரும்பிப் பார்க்கும் ரசிகர் கூட்டம் சைலண்டாக இருக்கும் தளபதி.? என்ன செய்ய போறார்.

தமிழ் சினிமா உலகை ரஜினிக்கு பிறகு மிக சிறப்பாக கட்டி ஆண்டு வருவது என்னவோ அஜித், விஜய். அவர்களுக்கென மிகப்பெரிய ஒரு கூட்டம் இருப்பதால் தமிழ் சினிமாவில் இவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்கின்றனர்.

அதற்கு ஏற்றார் போல இவர்களும் சினிமாவில் சிறப்பான படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கின்றனர் மேலும் தன்னால் முடிந்த நிதி உதவிகளையும் கொடுத்து மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகவே இருக்கின்றனர்.

தமிழ்நாடு தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் மக்கள் பெரும் துன்பத்தில் சிக்கி சின்னாபின்னமாகின்றனர் மேலும் இழப்புகள் அதிகமாக இருப்பதால் முதலமைச்சர் கொரோனா நிதி உதவி உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன் பிறகு பலரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தனர் அதிலும் குறிப்பாக சூர்யா சிவகுமார் ஒரு கோடி, ரஜினி ஒரு கோடி, அஜித் கொரோனா எழுத விகாரை 25 லட்சம் பெட்ரூம் பெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ஆக மொத்தம் 35 லட்சம் கொடுத்தார்.

சினிமாவில் டாப் நடிகர்கள் பலரும் தற்போது பணத்தை கொடுத்து வருகின்றனர் ஆனால் தளபதி விஜய் மட்டும் இதுவரை கொடுக்காமல் மௌனம் காத்து இருப்பதால் தற்போது அனைத்து பேரும் விஜய்யை திரும்பிப் பார்த்து உள்ளனர் அவர் எப்பொழுது பணம் கொடுப்பார் என்ற கேள்வி தற்போது எழத் தொடங்கியுள்ளது.

போனமுறை கொரோனா கொரோனா நிதி உதவிக்காக பல்வேறு மாநிலங்களுக்கு பணத்தை கொடுத்தார் விஜய். அதுபோல இப்பொழுதும் கொடுப்பாரா அல்லது தனது இயக்கத்தில் பணத்தைக் கொடுத்து அந்த அந்த ஏரியாவாக உதவி செய்ய போறாரா என்பது தற்போதைய ரசிகர்களின் கேள்வி குறியாக இருக்கிறது.

Leave a Comment