சினிமா உலகில் மூத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான கே ராஜன் சினிமா உலகில் நடக்கின்ற ஒரு சில விஷயங்களை நேரடியாக பேட்டிகளில் சொல்லியே பலரையும் அதிர வைத்து வருகிறார் அவர்கள் இளம் நடிகர்கள் தொடங்கி டாப் நடிகர்களுடன் யார் எந்த தவறு செய்தாலும் உடனே வச்சி செய்வது இவரது ஸ்டைல்லாக இருந்து வந்துள்ளது.
அண்மையில் கூட நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் வெற்றியை இருந்தாலும் ஒரு தரப்பு மக்களுக்கு அது பிடிக்காமல் போனது காரணம் சில சர்ச்சையான காட்சிகள் படத்தில் இருந்து வருவதாக கூறினர் இதனையடுத்து பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன இது குறித்து பேசிய ராஜன் நடிகர்களுக்கு பிரச்சனை என்றால் திரை உலகில் இருக்கும் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு சும்மா இருக்கிறார்கள் நடிகர் சங்கத்தில் ஆளுமை சரியாக இல்லை இதற்கு முன்பு இருந்த விஜயகாந்த், சரத்குமார் இவர் இருந்தபொழுது சிறப்பாக இருந்தது ஆனால் அது இப்பொழுது நடிகர் சங்க ஆளுமை சரியில்லை என அவர் சொன்னார். ஜெய்பீம் திரைப்படத்திற்கு முன்பாகவே ஒரு சிறப்பான சம்பவம் அரங்கேறியது.
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியபோது விஜய்க்கு ஆதரவாக நான் நோட்டிஸ் எல்லாம் விட்டிருந்தேன் அதை பார்த்துவிட்டு ஒரு நன்றி கூட விஜய் சொல்லவில்லை இப்பொழுது இருக்கும் நடிகர்கள் படங்களில் நடித்து சம்பளம் வாங்கிக்கொண்டு விட்டு போய் விடுகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் எல்லாம் பெரிய கடவுள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பொதுவாக அவர் விமர்சித்தது அந்த ஹீரோக்களை பெரிதும் தற்போது காயப்படுத்தி இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது இதனால் தயாரிப்பாளர் ராஜன் கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.