VJ சித்ராவிற்கு தொல்லை கொடுத்த பிரபல அரசியல்வாதி.? பூதாகரமாக வெடிக்கும் மர்மங்கள்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் விஜே சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஆனால் அதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இவர் சினிமாவில் நடிக்க வரும் பொழுது தன்னுடைய சொந்த முயற்சியால் தான் உள்ளே நுழைந்தார் ஏனென்றால் இவர் சினிமாவில் நடிக்க வருவது இவரின் அப்பா அம்மாவிற்கு பிடிக்கவில்லை அதனால் தன்னுடைய சொந்த செலவில் நாட்டியம் என அனைத்தையும் கற்றுக் கொண்டு நடிக்க வந்தவர்.

இந்த நிலையில் சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஆனால் இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என பல பிரபலங்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இவரின் அம்மா மற்றும் வருங்கால கணவர் ஹேம்நாத் தான் இவரின் தற்கொலைக்கு காரணம் என  தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார் தகவலை வெளியிட்டார்கள்.

இந்த நிலையில் ஒவ்வொருவரும் சித்ராவின் கொலையில் மர்மம் இருப்பதாக மாறிமாறி தகவல் கூறி வருவதால் மிகப்பெரிய பிரச்சனை கிளம்பியுள்ளது.  இந்த நிலையில் பிரபல அரசியல் பிரபலம் ஒருவர் சித்ராவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளன.

ஆனால் அவர் யார் சித்ராவின் தற்கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version