சில்க் ஸ்மிதாவை அந்த மாதிரியான படத்தில் நடிக்க அழைத்த பிரபல போட்டோகிராபர்..! அவர் பண்ணுன வேலை என்ன தெரியுமா.?

80,90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அந்த சமயத்தில் ஒரு படம் உருவாகிறது என்றால்  ஹீரோ, ஹீரோயின்களை தேர்வு செய்ததற்கு முன்பாக இவரை கமிட் செய்ய தான் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்துக் கிடந்தனர்

இப்படி சினிமா உலகை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த இவர் 1997 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது ஆனால் இதற்கான சரியான விடை இதுவரையிலும் கிடைக்காமல் தான் இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி சில்க் ஸ்மிதா குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

சில்க் ஸ்மிதா எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் அவரது எக்ஸ்கியூஸ் புகைப்படங்கள் பலவற்றை நான் எடுத்து இருக்கிறேன் அவர் என்னுடைய புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகராக இருந்தார் சில்க் ஸ்மிதாவை வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான் திமிர் பிடித்த பெண் போல் தெரியும் ஆனால் பழகிப் பார்த்தால் அவர் ஒரு குழந்தை..

அவரை யாராவது தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்தாலோ அல்லது அவரை யாராவது தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்தாலோ.. அவர்களை கூப்பிட்டு விளாசி விடுவார் மற்றபடி அனைவரிடமும் அன்பாக பேசக்கூடியவர் சில்க் ஸ்மிதா என கூறினார். மேலும் பேசிய அவர் நான் சில்க் ஸ்மிதாவை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்காக அவரை அணுகினேன் அந்த படம் பாலியல் உறவு சம்பந்தப்பட்ட படம் உடனே அவர் எனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் கணவரின் மிகப்பெரிய ரசிகன் நான்.

அவர் என்னை வைத்து அந்த மாதிரியான ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என நினைக்கிறார் அவர் மேல் நான் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன் ஆனால் அவர் என்னை வைத்து அப்படி ஒரு படம் எடுக்க வேண்டுமென எண்ணுகிறார் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார் அந்த அளவிற்கு என் மேல் மரியாதை வைத்திருந்தார் சில்க் சுமிதா எனது தாய்க்கு பிறகு சில்க் ஸ்மிதா இறந்த பொழுது தான் நான் சுடுகாடு வரை சென்று காரியம் செய்யும் வரை இருந்தேன் என கூறினார்.

Leave a Comment