பிளைட் பிடிச்சு லண்டனுக்கு சென்று தனுஷிடம் கதை கூறிய பிரபல இயக்குனர்.? டீலில் விட்ட தனுஷ்.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தனது ரசிகர்களுக்கு நல்ல நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து பல ஹிட்டடிக்கும் திரைப்படங்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர் தான் தனுஷ் இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் சும்மா தாறுமாறாக வசூல் செய்து வருகின்றன.

எனது ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை நான் கொடுக்க வேண்டும் என்று நல்ல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தனுஷ் சமீபகாலமாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனால் தனுஷை பல இயக்குனர்கள் சுற்றி வருகிறார்கள் ஏனென்றால் தனுஷுடன் ஒரு திரைப்படம் எப்படியாவது கைகோர்க்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் இவரை வைத்து படம் இயக்கினால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என பல இயக்குனர்கள் பிளான் போட்டு விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் தயாரிப்பாளர்களும் தனுஷை வைத்து படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் கலைபுலி எஸ் தாணு மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனுஷை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் பற்றி ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதில் தனுஷிடம் கதை கூறுவதற்காக ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேலுக்கு பிளைட் டிக்கெட் போட்டு தனுஷிடம் கதை கூறுவதற்காக லண்டனுக்கு அனுப்பி உள்ளார்கள் அங்கு போய் இந்த இயக்குனரும் தனுஷிடம் கதை கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பொழுது தனுஷ் ஜகமே தந்திரம் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்தாராம் இவர் கதை கூறி பல நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் தனுஷிடம் இருந்து வரவே இல்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த இயக்குனர் காத்திருந்தது போதும்.

dhanush 78
dhanush 78

வேறு வழியில்லாமல் விஷாலை வைத்து தற்போது ஒரு படம் இயக்கப் போவதாக தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி உள்ளது இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் பலரும் தனுஷ் மிகவும் நல்லவர் அவர் அப்பொழுதுதான் படப்பிடிப்பில் இருந்ததால் உங்களை மறந்திருப்பார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment