சொன்ன நேரத்திற்கு வராததால் “நயன்தாராவை” படத்திலிருந்து தூக்கி எறிந்த பிரபல இயக்குனர்..!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை நயன்தாரா.. இவர் தமிழில் ஐயா என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற..

டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை குவித்தார் மேலும் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டவர். இப்பொழுது கூட நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையமாக வைத்து கதை உருவாகிறதாம்.

இந்த படத்தில் நயன்தாரா ஷாருக்கான் அவர்களுடன் கைகோர்த்து சானியா மல்கோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75 மற்றும் அஜித்துடன் கைகோர்த்து ஏகே 62 திரைப்படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா பற்றி ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குடைக்குள் மழை என்னும் படத்தை எடுத்தார் இந்த படத்தில் கதாநாயகியாக முதலில் நடிக்க வைக்க அவர் நயன்தாராவை தான் செலக்ட் செய்து மறுநாள் தன்னை வந்து சந்திக்குமாறு பார்த்திபன் கூறி இருக்கிறார்.

ஆனால் நயன்தாரா சொன்ன நேரத்துக்கு வராமல் சிறிது நேரம் கழித்து வந்துள்ளார் இதனால் பார்த்திபனை அப்பொழுது பார்க்க முடியவில்லையாம் பிறகு பார்த்திபன் நயன்தாராவை இந்த படத்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டு அவருக்கு பதிலாக மதுமிதா என்ற நடிகையை குடைக்குள் மழை என்னும் படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment