தாவணியை கழட்ட மாட்டேன் என சொன்ன நடிகை.. கோபத்தில் அறைந்த பிரபல இயக்குனர்.! எந்த படத்தில் தெரியுமா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் நடிகை சீதா. முதலில் ஆண்பாவம் படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன்பிறகு வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி போன்ற படங்களில் நடித்து வந்த இவர் காலப்போக்கில் ஹீரோயின் என்ற வாய்ப்பை இழந்தார். பிறகு நடிகர் நடிகைகளுக்கு அம்மா, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் புதிய கீதை, ஆதி, மதுர, வியாபாரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து மீண்டும் சினிமா உலகில் அசத்தினார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெற்றி நடிகையாக வலம் வந்தார் இப்படி பயணித்த நடிகை சீதா 1990 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களுடைய வாழ்க்கை 2001 இல் முடிவுக்கு வந்தது ஆம் இருவரும் விவாதித்து பெற்று பிரிந்தனர். பிறகு சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அந்த வாழ்க்கையும் நீண்ட தூரம் நீடிக்க வில்லை பிரிந்தனர். இப்போ நடிகை சீதா சினிமாவை நம்பி தான் ஓடிக்கொண்டிருக்கிறார். சீதாவை சினிமா உலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது நடிகர் பாண்டியராஜன் தான்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக “ஆண்பாவம்” படத்தில் நடித்தார் அப்பொழுது ஒரு தரமான சம்பவத்தையும் சீதா செய்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சினிமாவில் நடிக்க சீதாவுக்கு விருப்பமே கிடையாது எப்படியோ அவரை சினிமாவில் நடிக்க அழைத்து வந்தனர் முதலில் ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜன் நடிக்க வைத்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு  ஒன்றில் கடிகாரம் ஒன்று சூடான நீரில் விழ அதை எடுப்பதற்கு சீதா தான் அணிந்திருந்த தாவணியை கழட்டி வட்டி கட்டி மாதிரி பயன்படுத்தி அந்த கடிகாரத்தை எடுக்க வேண்டும் இந்த சீனை பாண்டியராஜன் சொன்னதும் சீதா தாவணி கழட்ட முடியாது எனக்கூறி உள்ளார்.

பாண்டியராஜனும் கதைப்படி நீ இப்படித்தான் செய்ய வேண்டும் அதுதான் சரியாக இருக்கும் என கூற சீதாவும் முடியவே முடியாது என தொடர்ந்து மறுத்துள்ளார் சரி வேண்டாம் சைடு முந்தானையாவது வடிகட்டியாக பயன்படுத்தி கடிகாரத்தை எடு என பாண்டியராஜன் சமாதானம் படுத்தி உள்ளார். சீதாவும் சரி எனக் கூறியுள்ளார் உடனே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.  சொன்ன மாதிரி அந்த காட்சியில் நடித்து முடித்தவுடன் சீதா உடனே கேமராவை பார்த்து உள்ளார்.

இதனால் கோபமடைந்த பாண்டியராஜன் ஏன் கேமராவை பார்த்த எனக் கேட்டுள்ளார் அதற்கு சரி என சொல்லிய பிறகுதான் பார்த்தேன் என சீதா கோபமாக கூற.. இதை பார்க்க நாங்க இருக்கிறோம் என சொல்லிவிட்டு மறுபடியும் சீனை எடுத்தார். மறுபடியும் அதே தவறை சீதா செய்ததால் கோபத்தில் பாண்டியராஜன் கை ஓங்க கன்னத்தில் பட்டு விட்டதாம் இதனால் சீதா அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாராம் பிறகு ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்தி அந்த காட்சி எடுக்கப்பட்டதாம்..

 

Leave a Comment