பிடிக்காத ஒரு கதையை உருவாக்கி அதில் விஜயை நடிக்க வைத்த பிரபல இயக்குனர்.? கடைசியில் என்ன நடந்தது தெரியுமா..

சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர்கள் இப்பொழுது பஞ்ச்டயலாக் மற்றும் ஆக்சன் போன்றவற்றை சற்று கம்மி பண்ணி படங்களில் நடிக்கின்றனர் ஆனால் ஒரு கட்டத்தில் படங்களில் ஆக்ஷன் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் தான் அதிகமாக இருக்கும் அதையும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடிய காலங்களும் உண்டு அதற்கு ஏற்றார் போல ஒரு சில இயக்குனர்களும் இருந்து வந்தனர்.

அதில் முக்கியமானவராக பார்க்கப்பட வேண்டும் என்றால் பேரரசு தான். இயக்குனர் பேரரசின் பெரும்பாலான படங்களில் மாஸ் டயலாக் மற்றும் காமெடி அதிரடியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இவர் முதலில் ராம நாராயணனின் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக வாய்ப்பு தேடி சென்றார் முதலில் கமர்ஷியல் படத்தின் கதை ஒன்றை உருவாக்கி..

பல்வேறு தயாரிப்பு நிறுவனமும் கதையை கூறி உள்ளார். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ஆக்சன் மற்றும் மாஸ் டயலாக் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது என தயாரிப்பாளர்கள் கூற இயக்குனர் பேரரசு கோபத்தில் உடனடியாக போய் ஒரு கதையை உருவாக்கினார் அந்த கதைதான் திருப்பாச்சி.

இந்த கதையை எடுத்துக்கொண்டு குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் போய் கதையைக் கூறினார் அவர்களுக்கு பிடித்து போன பிறகு உடனே நீங்கள் விஜயிடம் கதையை கூற வேண்டும் என சொல்ல திண்டு விஜயிடம்  கூற அவருக்கும் ரொம்பப் பிடித்துப் போனதால் படத்தை எடுத்து விடலாம் என்று சொல்ல..

ஒரு வழியாக படம் எடுக்கப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து சிவகாசி திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.  உண்மையில் சொல்லப்போனால் கோபத்தில் உருவாக்கிய திருப்பாச்சி கதைதான் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட் எடுத்ததாக கூறினார்

Leave a Comment