பட்ஜெட் மட்டுமே 3000 கோடி பிரம்மாண்டத்திலும் பிரமாண்டம்.! பிரபல நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

சில வருடங்களாக திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க தொடங்கிவிட்டது எனவே தற்போது தயாரிப்பு நிறுவனங்களும் பல கோடி பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் நிலையில் ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அந்த வகையில் கேஜிஎஃப் 1,கேஜிஎஃப் 2, காந்தாரா போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் தயாரானது.

மேலும் பான் இந்திய படமாக உருவாகிய நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தது மேலும் இதுபோன்று மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம்தான் ஹோம்பாலே பிலிம்ஸ், இதன் சார்பாக அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தும், எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் அது தொடர்பான தகவல்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது, ஹோம்ப்லே பிலிம் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும் நிறைவானதாகவும் இருந்தது இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது அதற்காக மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன் சினிமா வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்தில் இருந்தே உள்ளது.

Producer
Producer

அது அனைவராலும் பாராட்டப்பட்டது நேர் நிலையாகவோ அல்லது எதிர் நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும் அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம் பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவில் உள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொண்டுவர ஒரு வாய்ப்பாக நமக்கு அமைகிறது.

Producer 1
Producer 1

இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும் போது நீடித்த நினைவாற்றலை கொண்டிருக்கக் கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை கொண்டிருக்கக் கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன் அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரித்து இருப்பதாக உறுதி அளிக்கிறோம் இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு எதிர்வரும் 5 ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்வோம் என்று உறுதி அளிக்கிறோம் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பலமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என அவரது குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment