ஷூட்டிங்கில் நடிகர் ரகுவரனை பளார்னு அறைந்த பிரபல நடிகை – வெளிவரும் தகவல்..

முரட்டுத்தனமாக இருப்பவர்கள் தான் சினிமாவில் வில்லனாக இருக்க லாக்கி என பலரும்.. நினைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதை உடைத்து எறிந்தவர் ரகுவரன் ஆள் பார்வதற்கு ஒல்லியாக இருந்தாலும்,  தனது குரல் வளத்தின் மூலம் ஹீரோகளை நடுங்க விடுவார் மேலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் அவரது நடிப்பு அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது..

இவரது நடிப்பு திறமையை பார்த்து மிரண்டு போன சினிமா உலகம் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது. ரகுவரன் சினிமாவில் ஆரம்பத்தில் ஹீரோ, வில்லன் என தொடர்ந்து நடித்து அசத்தினார். இப்படி இருக்கின்ற நிலையில் ரகுவரன் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என் வழி தனி வழி ரகுவரன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த படத்தை வி அழகப்பன் இயக்கினார்.  ரகுவரனுக்கு   ஜோடியாக நிசாந்தி நடித்திருப்பார். ரகுவரனுக்கு அக்காவாக கீதா நடித்திருந்தார். ரகுவரன் இந்த படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பார் நல்லவர்களுக்கு மட்டுமே அவர் வாதாடுவார்.

ஒரு கட்டத்தில் பெரிய அளவு கேஸ்கள் வராததால் மனம் உடைந்து அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார் இதைத் தெரிந்து கொண்ட அவரது அவரது அக்கா அவரிடம் முதலில் ஒரு பேச்சு வார்த்தை நடத்துவார் பிறகு ஒரு சீனில் அவரை கன்னத்தில் அடிக்க வேண்டும். சினிமா என்பதால் காட்சிக்காக பொறுமையாக அடிப்பார். ஆனால் இயக்குனர் சாதாரணமாக அடிக்க கூடாது வேகமாக அடிங்கள்  என்பாராம் இப்படியே பல டடேக்குகள் சென்றது.

ஒரு கட்டத்தில் கீதா நிஜமாகவே ரகுவரனை கன்னத்தில் சிவக்கும் வகையில் அடித்து விடுவார். அந்த சீன்தான் ஓகே ஆனது இதை நினைத்து கீதா ரொம்பவும் வருந்தி உள்ளார் ஆனால் கீதா வேகமா அடிக்க காரணமே இயக்குனர் இயக்குனர் தொடர்ந்து வற்புறுத்தியதால்..

raguvaran
raguvaran

வேறு வழி இல்லாமல் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதால் அப்படியே அடித்திருக்கிறார் ஆனால் இதை ரகுவரன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். தன் படத்திற்காக தானே இப்படி செய்தார் அதுவும் இந்த படத்தில் எனக்கு அவர் அக்கா அதனால் அவர் அடித்ததில் எந்த தவறும் இல்லை எனக் கூறி அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

Leave a Comment