படையப்பா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தவறவிட்ட பிரபல நடிகை.! இப்ப வருந்தி என்ன பயன்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்,சௌந்தர்யா,ரம்யா பாண்டியன் உட்பட இன்னும் பல பிரபலங்களின் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினர்,ரசிகர்கள் என்று அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள் அந்த அளவிற்கு இந்த படையப்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் ரஜினி எந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தாரோ அதே அளவிற்கு ரம்யா கிருஷ்ணனும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனத்தை பார்த்து பலர் அதிர்ந்து போனார்கள் அந்த அளவிற்கு நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக வேறு எந்த நடிகை நடித்து இருந்தாலும் இந்த அளவிற்கு நடித்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்தத் திரைப்படம் ரம்யா கிருஷ்ணனனின் சினிமா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்தார்.

அந்த வகையில் முதலில் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தான் கமிட்டாகி இருந்தாராம் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

அந்த வகையில் படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார்.இந்நிலையில் மீனாவை தான் முதலில் நீலாம்பரி கேரக்டருக்கு பேசியுள்ளார்கள். ஆனால் இதற்கு மீனா செட்டாக மாட்டார் என்பதை யோசித்து வேண்டாம் என்று கூறி விட்டார்கள். பிறகு சிம்ரனை வில்லியாக நடிக்க வைக்கலாம் என்று கூறி சிம்ரனை அணுகி உள்ளார்கள். அப்பொழுது சிம்ரன் பல படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அதன் பிறகு கே.எஸ் ரவிக்குமார் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த நிலையில் கடைசியாக ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். இந்த திரைப்படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கேஎஸ் ரவிக்குமார் உட்பட அனைவருக்கும் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தவிர வேறு எந்த நடிகையாலும் இந்த அளவிற்கு நடித்திருக்க முடியாது என தெரியவந்தது.

Leave a Comment