புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் முதல்வராக நடிக்கப்போகும் பிரபல நடிகை.!

சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையாமல் இருக்கும் பல நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை காயத்ரி. இருவர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். அதன்பிறகு கிடைக்கும் பல வாய்ப்புகளை வேண்டாம் வேண்டாம் என்று கூறி வந்ததால் ஒருகட்டத்தில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதன்பிறகு இவர் நடிப்பையும் தாண்டி நடன இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

என்னதான் இவர் நடிகை மற்றும் நடன இயக்குனராக என பலவற்றில் பணியாற்றி இருந்தாலும் சினிமாவில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.  இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர்.

இந்நிகழ்ச்சியில் இவர் பல நெகட்டிவ் விஷயங்களை வெளிப்படுத்தியதால் இந்நிலையில் விட்டு பாதியிலேயே வெளியேறினார்.  இருந்தாலும் ஓரளவிற்கு இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் சினிமாவையும் தாண்டி அரசியல் பற்றிய சில விஷயங்களை தனது டுவிட்டரில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ரசிகர்கள் தற்பொழுது இவர் திடீரென்று அரசியலில் குளித்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடைய முடியாது என்று கிசுகிசுத்து வருகிறார்கள். இந்நிலையில் காயத்ரி ரகுமான் தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் முதலமைச்சராக நடிக்க உள்ளதாகவும். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் செல்வராகவன் உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  எனவே இதனை வைத்து தற்பொழுது ரசிகர்கள் காயத்ரி ரகுமானை கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment