எப்படியாவது மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என சுந்தர் சியிடம் சரணடைந்த பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் தற்சமயம் ஒரு வெற்றி திரைப்படத்தில் கூட நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மலைபோல் நம்புவது இயக்குனர் சுந்தர் சி தான்.

ஏனெனில் இயக்குனர் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நல்ல கதையம்சம் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக இருப்பதன் காரணமாக எளிதில் அவரது திரைப்படங்கள் மெகா ஹிட் கொடுத்து விடுகிறது.

ஆனால் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை மூன்றாம் பாகம் சொல்லும்படி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுந்தர் சி அவர்கள் தற்போது ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் இயக்குனராக ஜொலிப்பார் என கேட்டால் அது சந்தேகம்தான்.

இந்நிலையில் நமது சுந்தர் சி அவர்கள் மறுபடியும் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளாராம் அந்த வகையில் நீண்ட காலமாக எந்த ஒரு திரைப்படத்தையும் கொடுக்க முடியாமல் தவித்து வரும் நடிகர் ஜீவா அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது மேலும் அவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடிகை ராசி கண்ணா நடிக்க உள்ளாராம்.

jeeva-1
jeeva-1

அதுமட்டுமில்லாமல் ஜீவா இதுவரை வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருவது மட்டுமில்லாமல் அவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் எப்படியாவது சுந்தர்சி உடன் கூட்டணி வைத்தால் நாம் பிரபலமாகி விடலாம் என்று முடிவு செய்துள்ளார்.

Leave a Comment