விவாகரத்து ஆன பொண்டாட்டியை அக்கட தேசத்தில் விரட்டி விரட்டி துரத்தும் பிரபல நடிகர்..! இத கேட்க ஆளே இல்லையா..!

பொதுவாக சினிமா பிரபலங்களின் வாழ்க்கையில் காதல் வருவதும் மோதல் வருவதும் வழக்கம் தான் அந்த வகையில் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் விவாகரத்தில்  முடிவதும் வழக்கமாக இருந்து வருகிறது இதைப் பற்றி கேட்டால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.

பொதுவாக திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி  திரைப்படத்தில் நடிக்க கூடாது என்பது ஒவ்வொரு நடிகருக்கும் மனதில் இருக்கும் நோக்கமாகும். ஆனால் நடிகைகளோ நீங்கள் நடித்தால் சரி நாங்கள் நடித்தால் தவறா என அவர்களிடம் வாதாட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இவ்வாறு ஏற்படும் வாக்குவாதம் ஆனது பின்னர் இவர்கள் விவாகரத்து செய்து கொள்வதற்கு வழி வகுத்து விடுகிறது. அந்த வகையில் பிரபல நடிகரின் குடும்பம் ஒரு பெருமை வாய்ந்த குடும்பமாக அமைந்துள்ளது இந்நிலையில் அவர்களுடைய குடும்பத்தில் திருமணம் செய்து விட்டால் திரைப்படத்தில் மனைவி நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அந்த குடும்பத்தின் தலைவரான பிரபல மூத்த நடிகர் கூட தன்னுடைய மனைவியை சுமார் முப்பது வருடமாக திரைப்படத்தில் நடிக்க விடாமல் செய்து இருந்தார் இதே போல தன்னுடைய மருமகளுக்கும் தடை விதிக்க இப்படி ஒரு சம்பவம் நேரிட்டது.

இந்நிலையில் நீண்ட நாட்களாகவே இவர்கள் எதற்காக மௌனம் காத்து வருகிறார்கள் என்பது தற்சமயம் தெரியவந்துள்ளது ஏனெனில் அந்த நடிகைக்கு பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது ஆனால் அக்கட தேசத்தில் ஒரு திரைப்பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் அக்கட தேசத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் தன்னுடைய கணவர் குடும்பத்திற்கு நெருங்கியவர் ஆகையால் தெலுங்கு சினிமாவை விட்டு அவரை விரட்டி விரட்டி அடித்து வருகிறார்கள்.

Leave a Comment