மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் “கடைசி ஆசையை” நிறைவேற்றிய குடும்பத்தினர்.! வெளியே கசிந்த அந்த புகைப்படம்.!

70 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரை சினிமா உலகில் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியவர் நடிகர் பிரதாப் போத்தன். சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்தது.

இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களை இயக்கி வெற்றியும் கண்டுள்ளார் அந்த வகையில் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சீவலப்பேரி, பாண்டி உட்பட 12 படங்களை இயக்கி உள்ளார் சினிமா உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் அதே சமயம் எழுத்தாளராகவும் சினிமா உலகில் பயணித்துள்ளார்.

70 வயதான பிரதாப் போத்தன் சில தினங்களுக்கு முன் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் ஆனால் இவரது இயற்கையை அவரே தீர்மானித்தார் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் இறப்பதற்கு முன்பாக வாழ்க்கை குறித்து சில பதிவுகளை அவர் facebook பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இறந்தது தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவையே கண்கலங்க வைத்து விட்டது ஏனென்றால் சிறந்த நடிகர் சிறந்த இயக்குனர் என பல வகையில் சினிமா உலகில் பணியாற்றி உள்ளார். இவர் இறந்த பிறகும் பிரதாப் போத்தனின் ஆசையை நிறைவேற்றி உள்ளது அவரது குடும்பம் பிரதாப் போத்தன் உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்.

ஆனால் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டாம் தகனம் செய்ய வேண்டும் என அவர் ஆசையை முன்பே தெரிவித்து இருந்தாராம் அதனை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி உள்ளனர். மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின்   உடல் வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதோ அந்த கடைசி நிமிட புகைப்படம்.

prathap poththan
prathap poththan

Leave a Comment