விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் இந்த வருடம் ஆறாவது சீசன் மிகவும் கோலாலமாக தொடங்கி உள்ளது இந்த ஆறாவது சீசனில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கிய உள்ளார்கள் 20 போட்டியாளர்களுக்கு இரண்டே இரண்டு கழிப்பறை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இதனால் பிக் பாஸ் வீட்டில் ரணகளமே நடந்து வருகிறது.
இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபல சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமியும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இரண்டாவது நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் நடைபெற்றது அப்பொழுது அந்த டாஸ்கில் ரட்சிதா மகாலட்சுமியிடம் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் உங்களை முதன் முதலாக சீரியலில் தான் நான் பார்த்தேன் அப்பொழுது இருந்தே உங்களை மிகவும் எனக்கு பிடிக்கும்.
எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் யாரும் கிடையாது அதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு உங்களுடன் இந்த உறவு நீடிக்க வேண்டும் என ரட்சிதா மகாலட்சுமியிடம் கூறியுள்ளார் ராபர்ட் மாஸ்டர். ரட்சிதா மகாலட்சுமி இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் இளவரசி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு தினேஷ் கோபால்சாமி என்பவரை ரட்சிதா மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும்விவாகரத்து முடிந்தது. இப்படி தன்னந்தனியாக இருக்கும் ரட்சித மகாலட்சுமி இடம் வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் இந்த உறவு நீடிக்க வேண்டும் என கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரண்டாவது நாளிலேயே ரட்சிதா மகாலட்சுமியிடம் இப்படி ஒரு ரூட் போட்டுள்ளார் வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட். இதனை ரட்சிதா மகாலட்சுமி ஏற்றுக்கொள்வாரா இல்லை இவர்களின் உறவில் விரிசல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.