மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகரின் ஷூட்டிங் முடிவு.! அதுவும் இந்த முரட்டு வில்லனின் காட்ச்சியா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விவர்ச்சனத்தை பெற்று ஓரளவு வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்த முக்கிய பிரபலம் தன்னுடைய காட்ச்சியை முடித்து விட்டாராம். ஆம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துள்ளார்.

இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ரிது வர்மா நாயகியாக நடித்துள்ளார், மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வப்ருகின்றனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை ஒரு பான்-இந்திய திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் வேலுக்குட்டி மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இந்த படத்தின் எடிட்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டண்ட் இயக்குனர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் மற்றும் ரவிவர்மா ஆகியோர் சண்டைக்காட்சிகளை செய்கிறார்கள், உமேஷ் ராஜ்குமார் தயாரிப்பு வடிவமைப்பை செய்கிறார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் மார்க் ஆண்டனி படபிடிப்பு தளத்தில் வாகனம் கட்டுபாட்டை இழந்து படபிடிப்பு தளத்திற்குள் நுழைந்து பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது அதிஷ்ட வசமாக யாருக்கும் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் செம்ம விரலானது.

மேலும் நடிகர் எஸ்.ஜே சூர்யா மார்க் ஆண்டனி படத்தின் படபிடிப்பை முடித்து உள்ளார். இது குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை போட்டு உள்ளார்.

இதோ அவரது பதிவு…

Leave a Comment