ஆர்யாவுக்கு முன்பாகவே சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு இப்படி டாப் ஹீரோவை அணுகிய இயக்குனர்.? யார் அவர் தெரியுமா தீயாய் பரவும் செய்தி.

திரை உலகில் பல்வேறு விதமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் ஆர்யா.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டெடி என்ற திரைப்படம் நல்லதொரு வெற்றியை பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் வெகு விரைவிலேயே உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது இப்படி இருக்க நடிகர் ஆர்யா தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சார்பட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்காக ஆர்யா பல மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து கரடுமுரடாக உடம்பை ஏற்றி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பா ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கம் மிகப்பெரிய ஒரு படமாக தமிழ்சினிமாவில் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பா ரஞ்சித் இந்த படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் அவர் கூறியது எனக்கு மெட்ராஸ் திரைப்படத்தின் பொழுதே ஆர்யாவை எனக்கு தெரியும்.

அப்போதிலிருந்தே எனக்கு ஒரு கதை எழுதுங்கள் என கேட்டுக்கொண்டே இருப்பார். சார்பட்டா பரம்பரை படத்திற்காக முதலில் நடிக்க தேர்வானவர் என்னவோ முதலில் நடிகர் சூர்யா தான் ஆனால் அது நிறைவேறாததால் கடைசியில் ஆர்யாவின் இந்த திரைப்படத்தில் நடிக்க தேர்வாகினர் என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment