இரண்டு அழகிகளையும் ஒரே படத்தில் இறக்கி அழகு பார்க்கும் இயக்குனர்..! படம் கண்டிப்பா செம்ம ஹிட்டு தான்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா ஆனால் இவர் சிறிது நாட்களாக எந்த ஒரு திரைப்படங்களிலும் தமிழ் சினிமாவில் முகம் காட்ட வில்லை ஆனால் வெகு நாளாக மறைந்திருந்த திரிஷா திடீரென பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் மாஸ் என்ரி கொடுத்துள்ளார்.

இவருக்கு இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த குந்தவை என்ற கதாபாத்திரம் மிகவும் சிறப்பு மிக்கவையாக இருந்தது மட்டுமில்லாமல் இவர் இன்றும் மிகவும் இளமையாகவும் பொலிவுடன் இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது பொதுவாக தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை தான் நயன்தாரா மற்றும் திரிஷா.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இதுவரை ஒரு முறை கூட ஒன்றாக பயணிக்க வாய்ப்புகள் கிடைத்ததில்லை ஆனால் ஒரு சில நேரங்களில் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாலும் சில பல காரணத்தின் மூலமாக அவை தட்டிப் போய்க் கொண்டே இருந்தது

அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதி நடித்த காட்டுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் கூட சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரிஷா தான் நடிகை இருந்தார் ஆனால் அவருக்கு சில பல காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயிற்று

மேலும் நடிகை திரிஷா சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை ஜீத்து ஜோசப் என்பவர் இயக்கி வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் சுமார் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் இவருடைய கதாபாத்திரம் முதல் பாகத்தில் இறுதியில் தொடங்கி இரண்டாம் பாகம் வரை தொடரும் என கூறப்படுகிறது.

மேலும் திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளனர் இதை அறிந்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் என கூறி வருகிறார்கள் மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு திரிஷாவின் நடிப்பை பார்க்க பல்வேறு ரசிகர் பெருமக்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

Exit mobile version