திரிஷாவை தொடர்ந்து பிரபல நடிகையிடம் கதையை சொன்ன சந்திரமுகி 2 பட இயக்குனர்.! கடைசி நேரத்தில் பி. வாசுக்கு நடந்த சோகம்.

பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடுத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் ரஜினி கேரியரில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாக  இருக்கிறது. மேலும் அதிக வசூல் செய்த திரைப்படம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து நயன்தாரா, விஜயகுமார், நாசர்,நயன்தாரா, வடிவேலு, ஜோதிகா, பிரபு மற்றும் பலர் நடித்து அசத்தினர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகும் என அப்பொழுதே பேசப்பட்டது ஆனால் ரஜினி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியதால் இரண்டாவது பாகத்திற்கான வாய்ப்பு அப்பொழுது கைவிடப்பட்டது. இயக்குனர் பி. வாசு இரண்டாவது பாகத்தை எடுத்து தீர வேண்டும் என ஒரு முடிவோடு இருந்தார் ஒரு வழியாக சந்திரமுகி 2 படத்தின் கதையை உருவாக்கி.

அதை ராகவா லாரன்ஸ் இடம் சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்து போகவே படமாக்கப்பட்டது. ஆம் இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ்  ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி மற்றும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகளை பட குழு தேர்வு செய்து வருகிறது முதலில் திரிஷாவிடம் கதையை சொல்லி அவரை கமிட் செய்து விட்டது.

திரிஷா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டாவது ஒரு நடிகையிடம் கதையை சொல்லி உள்ளார் இயக்குனர் அந்த நடிகை வேறு யாரும் அல்ல தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி சூப்பராக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி இடம்தான் பி. வாசு சந்திரமுகி படத்தின் முழு கதையையும் சொல்லி உள்ளார்.

ஆனால் கதை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே சாய் பல்லவி இடையில் பல தடவை குறுக்கிட்டு கதையில் அப்படி வந்தால் சூப்பராக இருக்கும் இப்படி வந்தால் சூப்பராக இருக்கும் என கூறி பேசியுள்ளார். இதனால் கடுப்பான வாசு அங்கிருந்து கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஒரு சீனியர் இயக்குனர் என்று கூட  பார்க்காமல் சாய் பல்லவி சந்திரமுகி 2 படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லுவது இருந்தால் இயக்குனருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

Leave a Comment