முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கமலை நடிக்க வைக்க தயக்கம் காட்டும் இயக்குனர்..!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படங்கள் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் கமலின் பல்வேறு திரைப்படங்கள் இரண்டாம் பாகம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் திருஷ்யம் என்னும் மலையாள படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மலையாளத்தில் இரண்டு பாகங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தமிழில் இரண்டாம் பாகம் வெளிவராமல் போய்விட்டது. அதேபோல 90களில் கமலஹாசனின் கல்யாணராமன் என்ற திரைப்படம் இரண்டாம் பாகமானது ஜப்பானில் எடுக்கப்பட்டு மிகப் பிரம்மாண்ட வெற்றி கொடுத்தது.

அதேபோல அவருடைய சொந்த தயாரிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படம் இரண்டு பாகங்கள் வெளியாகியதை தானே இயக்கி தானே நடித்திருந்தார் கமலஹாசன். இதனை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதற்கான நடிகர்கள் தேடும் பணியில் சங்கர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அதேபோல  கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூட சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது அதேபோல இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் கண்டிப்பாக வெளியாகும் எனவும் அதேபோல கைதி திரைப்படத்தில் இரண்டாம் பாகமும் இதனுடன் இணையும் என தகவல்கள் நன்றாகவே தெரியும்படி லோகேஷ் திரைப்படத்தில் காட்டி இருப்பார்.

இதே போல கமலின் மற்றொரு திரைப்படம் ஒன்று மாபெரும் வெற்றி பெற்று இரண்டாம் பாகத்திற்கு தயாராக உள்ளது இதில் கமலஹாசன் நடிப்பதற்கு தயாராக இருப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் தயாராக இருக்கிறார் ஆனால் இயக்குனர் மட்டும் ஏதோ தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவை வேற எந்த திரைப்படமும் கிடையாது வேட்டையாடு விளையாடு திரைப்படம் தான் இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் அவர்கள் இயக்கியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் படையப்பா திரைப்படத்தின் வசூலையே முறியடித்தது என்று சொல்லலாம் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் 25 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டு 60 கோடி வசூலை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்தது. இன் நிலையில் கௌதம் மேனன் இந்த திரைப்படத்தை இயக்க ரெடியாக இல்லாத காரணத்தினால் ஐசாரி கணேஷ் இந்த திரைப்படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து கூட இயக்குவேன் என  எச்சரித்து வருகிறாராம்.

Leave a Comment