‘கோலங்கள் 2’ சீரியலை குறித்து மனம் திறந்த இயக்குனர்.! ஹீரோயின் இவர்தான்..

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தமிழ் சின்னத்திரையின் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வரும் நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வெற்றியைக் கண்டு வருகிறது.

அப்படி பல ஆண்டுகளாக மக்களை கவர்ந்த சீரியல் தான் கோலங்கள் இந்த சீரியல் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மொத்தம் 1533 எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரின் நாயகியாக தேவயானி நடித்த நிலையில் இவரை அடுத்து இவருக்கு பதில் முதலில் மறைந்த நடிகை சௌந்தர்யா தான் நடிக்க இருந்தாதாம்.

ஆனால் அவருக்கு மற்ற வேலைகள் நிறைய இருந்த காரணத்தினால் அவரால் இந்த சீரியலில் நடிக்க முடியாமல் போய் உள்ளது எனவே அதன் பிறகு தான் நடிகை தேவயானியை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர். அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை திருச்செல்வன் என்பவர் இயக்கி வரும் நிலையில் இவர்தான் கோலங்கள் சீரியலையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

thiruselvan

இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட திருச்செல்வன் கோலங்கள் இரண்டாம் சீசன் வரப்போவதாக கூறினார். ஆனால் இந்த சீரியலில் யார்? யார்? நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் முன்னணி வகுப்பு வரும் நிலையில் இது பெண்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே ஆணாதிக்கத்தை அடக்கும் வகையில் பெண்கள் இந்த சீரியலில் போராடிவரும் நிலையில் இதனை பார்த்துவிட்டு தங்களுடைய நிஜ வாழ்க்கையில் பல பெண்களும் மாறி வருவதனால் பலரும் இந்த சீரியலை நிறுத்த வேண்டும் என கருத்துக்களை கூறி வருவதாக திருச்செல்வன் கூறினார்.

Leave a Comment

Exit mobile version