ஒன்றல்ல இரண்டல்ல மூன்று குழந்தைகளுக்கு தாயான ஈரம் பட நடிகையின் தற்போதய நிலை..!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு அதன் பிறகு என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்து வரும் நடிகைகள் பலர் உண்டு அந்த வகையில் நடிகை சிந்துமேனன் ஒருவர். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சமுத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் முரளிக்கு ஜோடியாக நடித்து திரையில் அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான யூத் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பின்னர் வெகு காலமாக  சினிமாவில் நடிக்காமல் இருந்த நமது நடிகை 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் என்ற திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய பத்து வயதிலிருந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் மலையாள படங்களில் பல திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல் நமது நடிகைக்கு தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற அனைத்து மொழிகளும் மிக சரளமாக பேசுவாராம்.

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நமது நடிகை அதன் பின்னர் தன்னுடைய 15 வயதிலேயே கன்னடம் சேனல் ஒன்றில் விஜே வாக பணிபுரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நமது  நடிகை ஒரு கட்டத்திற்கு பிறகு லண்டன் மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

sindhu menon-2

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடித்து வந்த  சிந்து மேனன் பிறகு என்ன காரணம் ஆயிற்று என்பது தெரியாமல்  திரையில் முகம் காட்டாமல் இருந்து வந்தார் ஆனால் அதன் பின்னர் தான் தெரிந்தது  ஒரு குழந்தைக்கு தாய் ஆனது என்பது.

sindhu menon-1

தற்போது இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில் இதை தொடர்ந்து மூன்றாவது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். தற்போது லண்டனில் வசித்து வரும் நமது நடிகை தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version