படத்தில் காமெடியன் நிஜ வாழ்க்கையில் வில்லன்.! நடிகர் வடிவேலு இப்படியெல்லாம் செஞ்சிருக்காரா.?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் வடிவேலு இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அது மட்டும் அல்லாமல் சினிமாவில் உள்ள நடிகர்களை விட காமெடி நடிகர்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்றால் அது வடிவேலுக்கு மட்டும் தான் அந்த அளவிற்கு தனது சிறந்த காமெடியின் மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு படங்களில் மட்டும்தான் காமெடியனாக இருந்திருக்கிறார் நிஜ வாழ்க்கையில் கொடூரவிள்ளனாக இருந்திருக்கிறார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது தன்னுடன் நடிக்கும் துணை காமெடி நடிகர்களை யாரையும் மதிக்கவே மாட்டாராம்.

அது மட்டுமல்லாமல் எங்கே அவர்கள் தன்னைவிட அதிகமாக சம்பளம் வாங்கி விடுவார்கள் என்று என்னி தனக்கு கீழேவே தான் வைத்திருப்பாராம். மேலும் நடிகர் வடிவேலு தன்னை விட்டு வேறொரு படங்களில் நடிக்க சென்றால் அந்த நடிகரின் வாய்ப்பை எப்படியாவது தட்டி பறித்து விடுவாராம்.

இப்படி தமிழ் திரையுலகில் காமெடியனாக தெரிந்த வடிவேலு உள்ளுக்குள் ஒரு கொடூர வில்லனாக இருந்து வருகிறார். உதாரணத்திற்கு போண்டாமணி சிறுநீரகப் பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தனக்கு உதவி செய்யும்மாறு பல பிரபலங்களிடம் கேட்டு இருக்கிறார் அதற்கு வடிவேலு 5ரூபாய் கூட கொடுக்கவில்லையாம்.

அதற்கு என்ன காரணம் என்றால் நடிகர் போண்டா மணி வடிவேலுவுடன் நடிப்பதை விட்டு ஒரு முறை விவேக் உடன் நடித்தது தான் வடிவேலுக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் யாரும் முன்னுக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என்று கூறப்படுகிறது.

இவர்களின் சாபத்தால் தான் நடிகர் வடிவேலு கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இவர் தற்போது நடித்து வரும் படங்களும் சரிவர ஓட வில்லை பழைய மாதிரி அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Comment