தென்னிந்திய சினிமா உலகில் அண்மை காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் 300 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் படத்தை எடுத்து அசத்துகின்றன அந்த படங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றியை ருசித்து இந்திய அளவில் பிரபலம் அடைகிறது.
அந்த வகையில் பிரசாந்த் நீல் நடிகர் யாஷை வைத்து உருவாகி வெற்றிகண்ட திரைப்படம் தான் KGF 2. இந்த படம் உலக அளவில் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது தெலுங்கில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இயக்கிய எஸ்எஸ் ராஜமவுலி பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிறு இடைவெளிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சாரணை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் RRR.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஓடி உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் படங்கள் எடுக்கின்றனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் எடுக்க முடியவில்லை என மற்ற மொழி சினிமா பிரபலங்கள் கேலி செய்து வந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் இந்த படத்தை நாவலை மையமாக வைத்து எடுத்து வருகிறார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார் முதல் பாகத்தில் பல டாப் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்கியுள்ளார் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு முடிந்தது.
படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் காட்சிகள் எல்லாம் சீரமைக்கப்பட்டு பின்னணியாக இயக்குனரிடம் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் படத்தைப் பார்த்த அவர் படத்தின் சில காட்சிகளில் சிறப்பாக இல்லை என ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளாராம். இதனால் படக்குழு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் மண்டையை பிச்சி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.