செல்வராகவனை செருப்பால் அடித்த பிரபலம்.! காரணம் என்ன என்று தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பகாசூரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தான் செய்த தவறினால் பிரபலம் ஒருவரிடம் செருப்பால் அடி வாங்கியதாக ஒரு பேட்டியில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவர் எதற்காக அடித்தார் என்று ரசிகர்கள் காரணம் கேட்டு புலம்ம்பி வருகிறார்கள்.

அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் செல்வராகவன் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை கூறி இருந்தார் அப்போது நான் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் படிக்க விருப்பமில்லை. அதனால் எனது தந்தை நான் நன்றாக படிக்க வேண்டும் என்று வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் அங்கும் நான் ஒழுங்காக படிக்கவில்லை என்று என்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா அவர்கள் என்னை செருப்பால் அடித்தார் என்று செல்வராகவன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதன் பிறகு செல்வராகவனின் சினிமா ஆசையை புரிந்து கொண்ட கஸ்தூரி ராஜா இயக்குனர் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

அப்படி சினிமாவின் ஆர்வத்தை தான் இயக்கம் ஒவ்வொரு படத்தின் மூலம் வெளிபடுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் செல்வராகவன் போல் ஒரு இயக்குனர் இல்லை என்றால் தனுஷ் போன்ற ஒரு முன்னணி நடிகர்கள் பலர் இருந்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் தனுஷ் தற்போது இருக்கும் நிலைமைக்கு ஒரு மிகப்பெரிய பங்கு செல்வராகவன் தான் ஏனென்றால் செல்வராகவன் இயக்கிய பல திரைப்படங்களில் தனுஷ் அவர்கள் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment