வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளரை மீண்டும் உள்ளே இழுத்துப்போடும் பிக்பாஸ்.? ஏன் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் முக்கிய நிகழ்ச்சியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதனை சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த முறையும் தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா   ஆகியோர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மீதம் 12 பேர் விளையாண்டு வருகின்றனர்.

மேலும் சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மதுமிதா வெளியேற்றப்பட்டார். இதனிடையே இந்த சீசன் கடந்த நான்கு சீசன்களை ஒப்பிடும் வகையில் இந்த சீசனில் சற்று சுவாரசியமும் விறுவிறுப்பும் குறைவாகவே உள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்கள் இடையே பெரிதும் வாக்குவாதம் சண்டை சச்சரவு போன்ற நிகழ்வுகள் தென்படவில்லை.

இருந்தும் அப்படி ஒரு சில சண்டை சச்சரவு இருந்தாலும் உடனே சமரசம் ஆகி விடுகின்றன. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர்  அபிஷேக் ராஜா. இந்த வீட்டில் இவர் மற்ற போட்டியாளர்களிடம் தனித்தனியாக பேசி அவர்களின்  மனநிலையை குழப்பி வந்திருந்தார்.

மக்களுக்கும் இவர் கேம் பிளான் என்ன என்று புரியாத வண்ணமே உள்ளன. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூன்றாவது வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற பட்டார். தற்போது இவரை கன்டென்டிற்காக  மீண்டும் பிக் பாஸ் வீட்டில்  வையல்கார்டு என்ட்ரி ஆக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Comment