சார்பட்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்பாவானார் ஆர்யா.! சாயிஷாவிற்கு என்ன குழந்தை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் அந்த வகையில் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் தான் நீண்ட காலம் தங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா-சினேகா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த லிஸ்டில் புதிதாக இணைந்தவர்தான் ஆர்யா மற்றும் சாயிஷா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது  காதலிக்க ஆரம்பித்தார்கள் அதன்பிறகு 2019ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

சாயிஷா தமிழில் முதன்முதலாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன்  என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர்யாவுடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார் பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பிறகு ஆர்யா சாயிஷா இருவரும் இணைந்து காப்பான் திரை படத்தில் நடித்திருந்தார்கள்.

ஆர்யாவிற்கு திருமணம் செய்துவைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை. இருந்தாலும் 38 வயதில் இருபத்தொரு வயதான ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார் ஆர்யா இவர்களின் வயது வித்தியாசத்தை பலரும் விமர்சனம் செய்தார்கள்.

மேலும் திருமணத்திற்கு பிறகு டெடி என்ற திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். இந்த நிலையில் ஆர்யா மற்றும் சாய்ஷா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த விஷயத்தை ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் மாமாவாகிட்டேன் என மிகவும் சந்தோஷத்துடன் பதிவிட்டுள்ளார்.

அப்பா என்ற அந்தஸ்தை அடைந்து ஆர்யாவிற்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

vishal

Leave a Comment

Exit mobile version