வசூல் மழையில் “நெஞ்சுக்கு நீதி” மூன்றாவது நாள் முடிவில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் ஜாலியான படங்களை கொடுத்து அசத்தி ஓடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கட்டத்தில் ஆக்சன் மற்றும் வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் அந்த படங்களும் அவருக்கு வெற்றியைக் கொடுத்தன தொடர்ந்து சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் திடீரென தனது அப்பாவுடன் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து சினிமா அரசியல் இதைத்தாண்டி ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் தொட்ட எல்லாத்தையும் வெற்றியைக் கண்டு வந்த இவர் எதையும் நிறுத்திக்கொள்ளாமல் அனைத்திலும் தொடர்ந்து இப்போது பயணிக்கிறார்.  ஆனால் அரசியல் இவருக்கு மிக முக்கியம் என்பதால் ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் சினிமா பயணத்தில் இப்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று அண்மையில் திரைக்கு வந்துள்ளது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார் இந்த படம் அண்மையில் திரையில் வெளிவந்து வெற்றிநடை கொண்டு வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளதால் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் கூட்டம் இந்த படத்தை கண்டு வருகின்றனர். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து இளவரசு, சக்கரவர்த்தி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியில் வெளியான ஆர்டிகள்  15  படத்தின் ரீமேக் தான் தமிழில் நெஞ்சுக்கு நீதி என எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் மட்டுமே இதுவரை 5.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாள்களிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல வசூலை அள்ளும் என படக்குழு நம்பியுள்ளது.

Leave a Comment