விடுதலை படத்தில் அந்த காட்சியில் நடித்தது குறித்து பேசிய நடிகை.! வெளியான சூப்பர் தகவல்…

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை இந்த திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தென்றல் ரகுநாதன் அவர்கள் நடித்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு காட்சியில் ஆ* இல்லாமல் நடித்திருப்பார் இந்த நிலையில் நடிகை தென்றல் ரகுநாதன் ஆ* இல்லாமல் நடித்தது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை தென்றல் ரகுநாதன் அவர்கள் வெற்றிமாறன் சார் செங்கல்பட்டில் படப்பிடிப்பில் இருந்தார் அப்போது இரவு 7:00 மணிக்கு அவரை சந்தித்து பேசினேன் அவரும் சரிமா என்று சொல்லிவிட்டார். வசனம் பேசுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

அது மட்டுமல்லாமல் அவரிடம் நான் கதை கதாபாத்திரம் எதையும் கேட்கவில்லை ஏனென்றால் அவர் வெற்றிமாறன் சார் என்பதால் அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது அதன் பிறகு காவல் நிலைய காட்சி என்றார்கள் ஆனால் ஆ* இல்லாமல் நடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே அவர்கள் சொல்லவில்லை.

அந்த இடத்தில்தான் என்னிடம் சொன்னார்கள் கதைக்கு தேவைப்படுகிறது என்பதால் நானும் ஆ*யில்லாமல் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் தற்போது நான் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறேன் என்று உணர்ந்ததால்தான் நான் அந்த காட்சியில் நடித்தேன்.

ஆனால் நான் ஆ* ஒன்றும் இல்லாமல் நடிக்கவில்லை சிஜியில் எடிட் செய்து மாற்றிவிட்டார்கள். ஆனால் அப்படி நடிக்கிறோமே என்ற தயக்கம் பயம் எதுவுமே இல்லாமல் கதைக்கு தேவைப்பட்டு நான் அந்த படத்தின் கதாநாயகியின் அம்மாவாக நடித்தேன் என்று கூறி இருக்கிறார். இவருடைய அந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment