ஒரே ஒரு படம் தான தயாரிச்சன்.. வீட்டை விற்றுவிட்டு நடுதெருவுக்கு வந்த நடிகர் கஞ்சாகருப்பு.!

வெள்ளித்திரையில் பல காமெடி நடிகர்கள் உருவாகி வருகிறார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கவில்லை செந்தில் கவுண்டமணிக்கு அடுத்ததாக வைகைப்புயல் வடிவேலு வந்தார் ஆனால் அவரை அடுத்து அந்த இடத்தில் நிறைய நடிகர்கள் வந்தாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் தான் காமெடி நடிகர் கஞ்சாகருப்பு.

இவர் வெள்ளித்திரையில் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பருத்தி வீரன் திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார் அதனை தொடர்ந்து இவர் களவாணி திரைப்படத்தில் பஞ்சாயத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

இவ்வாறு நடித்து வந்த நடிகர் கஞ்சாகருப்பு சொந்த காசில் தனக்குத்தானே சூனியம் வைத்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாராம் அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல் என்ற திரைப்படத்தைத் தயாரித்தாராம் ஆனால் அந்த திரைப்படம் அட்டர் பிளாப் ஆகி கஞ்சா கருப்பை கடனாளியாக ஆக்கியதாம்.

மேலும் இயக்குனர் பாலா மற்றும் அமீர் தயாரிப்பு வேண்டாம் என்று சொன்னார்களாம் அதை கஞ்சாகருப்பு கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளாமல் தனது வழியில் நடந்தாராம் இதனாலேயே அவர் 4 கோடிக்கு கடனாளி ஆனார் அதனால் தனது சொந்த வீட்டை விற்று அந்தக் கடனை அடைத்தாராம்.

அதோடு போதும்டா சாமி இனிமேல் சொந்த படம் எடுக்கவே மாட்டேன் என ஆவேசமாக அந்த பேட்டியில் கூறியதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது மேலும் இந்த தகவலை அறிந்த புதுப்புது இயக்குனர்கள் எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Ganja Karuppu
Ganja Karuppu

Leave a Comment