ஹீரோக்களுடன் கண்டிஷன் போட்டு நடிக்கும் நதியாவை காதலில் சுத்த விட்ட நடிகர்.. ஆசை யார விட்டது!

Nadhiya : திரை உலகில் நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்ற தனது திறமையையும் தாண்டி கிளாமரை கிளாமர் காட்டி நடிப்பது அவசியமாக இருக்கிறது ஆனால் சில நடிகைகள் கிளாமரை காட்டாமல் கண்டிஷன் போட்டு நடித்து வருகிறார்கள் அவர்களில் ஒருவர் நடிகை நதியா.

இவர் பூவே பூச்சூடவா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, பிரபு என பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார் இவர் இதுவரை கமலுடன் மட்டும் நடித்ததே கிடையாது. டாப் நடிகர்களுடன் நடித்தாலும் இவர் கிளாமர் காட்டியது கிடையாது.

வீட்டுக்கு தெரியாமல் கிளாசை கட் அடித்து விட்டு இனியா பார்த்த வேலை.. பாக்கியாவுக்கு ஆதரவு கொடுத்த கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

மேலும் கட்டிப்பிடிப்பது, லிப் லாக் போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என கண்டிஷன் போட்டு நடிக்க கூடிய நடிகை.கிசுகிசுவிலும் சிக்கியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகை நதியா நடிகர் சுரேஷ் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் அப்பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும்..

இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் கசிந்தன ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சுரேஷ் பழைய பேட்டி ஒன்றில் நானும், நதியாவும் நல்ல நண்பர்கள் தான் கடைசி வரையிலும் நண்பர்களாக இருப்போம் எனக் கூறிய அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

டைட்டானிக் காதலே தோத்துடும் போல.. ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா செய்யும் அலப்பறை..

அவர் சொன்னது போலவே நதியாவும் இவரும் நல்ல நண்பர்களாக கடைசி வரையும் இருந்தனர் இருவரும் தனித்தனியாக திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி உள்ளனர். நதியாவுக்கு  வயது நாற்பது கடந்தாலும் அவர் இன்னும் இளமையுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.