சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா.! அட இது தெரியாம போச்சே.!

நேற்று முன் தினம் தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடும் திரைப்படம் தான் மாநாடு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா,சிம்பு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் நேற்று பல திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே பல கோடி வரை வசூல் செய்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் நிறைய தடைகள் இருப்பதால் வேறொரு தேதியில் தான் மாநாடு வெளியாகும் என்ற தகவல் வெளியானபோது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகி விட்டார்கள் இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் கோபத்துடன் மாநாடு திரைப்படம் வந்தே ஆக வேண்டும் அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று கமென்ட் பதிவு செய்து வந்ததையும் நாம் பார்த்திருக்கலாம்.

குறிப்பாக மாநாடு திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்தத் திரைப்படம் இன்னும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் எனவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது எஸ் ஜே சூர்யா நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் வேற ஒரு நடிகர்தான் நடிக்க வேண்டும் என ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது.

அதாவது எஸ் ஜே சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் அரவிந்த்சாமி அவர்கள் தான் நடிக்க வேண்டுமாம் படம் அப்பொழுது ஒரு சில பிரச்சனைகளில் இருந்ததால் அப்பொழுது அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம் அதன் பிறகுதான் மாநாடு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்கள் நடித்துள்ளதாக தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

simbu
simbu

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எஸ் ஜே சூர்யா நடித்திருந்தாலும் இந்த படம் நன்றாக வந்துவிட்டது ஆனால் அரவிந்த்சாமி நடித்திருந்தால் இந்த படம் நன்றாக வந்திருக்குமா என்பது கேள்வி குறி தான் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment