மீடியா உலகத்திற்கு தான் அஜித், விஜய்.. சத்தமே இல்லாமல் பொன்னம்பலத்திற்கு 45 லட்சம் அள்ளிக் கொடுத்த நடிகர்.. வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்கள் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பொன்னம்பலம். இவரை ரசிகர்கள் செல்லமாக கபாலி என அழைப்பது வழக்கம். முதலில் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் மைக்கேல் மதன காமராஜன் என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு புது மனிதன், பரதன், பெரிய மருது, முத்து, பெரிய குடும்பம், மலைக்கோட்டை, பேரரசு, வரலாறு, வேட்டையாடு விளையாடு என பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஓடிக் கொண்டிருந்த இவர் இப்பொழுது வரையிலுமே அவர் தமிழில் தான்  அதிகம் நடித்து வருகிறார். சினிமா தான் வாழ்க்கை என கொண்டிருந்த இவருக்கு சிறுநீரக தொற்று பிரச்சனை யால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஷயத்தை முதலில் கேள்விப்பட்ட கமல் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்து அவருக்கு பண உதவி கொடுத்தார் அதோடு மட்டுமில்லாமல் அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவையும் ஏற்றார் இதனை அடுத்து ரஜினியும் சில உதவிகளை செய்தார். அவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அஜித் போன்றவர்கள் பெரிதும் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அவர்கள் உதவி  செய்யவில்லை.

ஆனால் டாப் நடிகர் சிவராஜ் குமார் 45 லட்சம் பணம் உதவி செய்துள்ளார் அவர் உதவி செய்தது உள்ளார் அது குறித்து சமீபத்தில் பொன்னம்பலம் வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..  எனக்கு உடல் நலம் சரியில்லாததால் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அண்ணா என சிரஞ்சீவி மெசேஜ் செய்தாராம் பொன்னம்பலம் மெசேஜை பார்த்த நிமிடத்தில் உடனேயே போன் பேசி உள்ளார் சிரஞ்சீவி ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்க என கேட்டார்.

எனக்கு சிறுநீரகம் செயலிழந்துவிட்டது சார் சொல்ல உடனே உனக்காக கேட்டார் ஆமா அண்ணா சிகிச்சைக்கு பணம் இல்லை வாழ பிடிக்கவில்லை என்று சொன்னேன் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது உடனே சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு போ என சொன்னார். நானும் சரி டயாலிசிஸ் செய்யத் தான் உதவப் போகிறார் என நினைத்தேன். அங்கு போனவுடன் என்ட்ரி போட்டு 200 ரூபாய் கார்டு ஒன்னு கொடுத்தார்கள் அந்தக் கார்டுக்கு காசு வாங்கவில்லை கிட்டத்தட்ட 45 லட்சம் செலவு பண்ணினார்.

ஏதோ ஒரு லட்சம் செலவு பண்ணுவார் என நினைத்த பொழுது எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்துள்ளார் என பொன்னம்பலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார் அதே போல் தனுஷும் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அக்கவுண்டில் பணம் அனுப்பி உதவி செய்தார் அதே மாதிரி அர்ஜுன் சாரும் உதவி செய்தார் எல்லாம் நான் எதிர்பார்க்காமல் உதவி செய்துள்ளனர் சரத்குமார்  உதவி செய்தார். இருந்தாலும் அஜித், விஜய் விக்ரம் ஆகிய அவர்கள் உடல் நலம் குறித்து ஒரு போன் போட்டு கூட விசாரிக்கவில்லை என தனது வருத்தத்தை தெரிவித்தார்.

Leave a Comment