வயதான தோற்றத்தில் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் இயக்குனரா.? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

தமிழ் திரையுலகில் தற்போது நடிகர்களாக நடித்து வரும் பல பிரபலங்களும் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர்களாகவும்,இசையமைப்பாளர்களாகவும் மற்றும் பல துறைகளில் பணியாற்றி விட்டு தான் பின்பு நடிகர்களாக நடிக்க வருகிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் இயக்குனராக இருந்த பல பிரபலங்களும் தற்பொழுது சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இசை அமைப்பாளராக பணியாற்றி திடீரென்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவர் தான் விஜய் ஆண்டனி இவர் நடித்த நிறைய திரைப்படங்களில் மக்களுக்கு மறக்கமுடியாத திரைப்படமாக அமைவது பிச்சைக்காரன் திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் தனது அம்மா உயிர் பிழைப்பதற்காக 48 நாள் விஜய் ஆண்டனி பிச்சை எடுக்க வேண்டும் என்பதுதான் அதேபோல் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக விஜய் ஆண்டனி பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து பிச்சை எடுப்பார் அப்பொழுது இவருக்கு நிறைய நண்பர்களும் கிடைத்து விடுவார்கள்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் எப்எம் ரேடியோவில் பேசி மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய நடிகர்தான் கோவிந்த மூர்த்தி இவர் நடிகராக பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது மட்டும் தான் நமக்குத் தெரிந்த விஷயம் ஆனால் இவர் இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கியுள்ளாராம்.

அந்த வகையில் இவர் பப்பாளி என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் புகழ் பெற்றாராம்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு திரைப்படங்களில் நடிப்பதை விட இயக்குவது தான் பிடிக்கும் என கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினாராம் அதேபோல் இவர் நாடோடி2 திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான இவரது புகைப்படமும் தற்போது கிடைத்துள்ளது ஆம் பார்ப்பதற்கு கோட் சூட்டுடன் ஆள் அடையாளமே தெரியாமல் ஹாலிவுட் பட ஹீரோ போல் இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரா பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்தது என ஆச்சரியப் பட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment