செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயன் மகள் செய்த செயல்.! நெகிழ்ந்து போன பிரபலங்கள்..

சென்னையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட 48வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று நிறைவடைந்ததை அடுத்து நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். அதில் முக்கியமாக சிவகார்த்திகேயனின் மகள் ஆதாரனா செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில் முதல் கட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் நிறைவு விழா நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது.

பொதுவாக நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம் என எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்பும் மரியாதையுடன் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்நிலையில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களின் குழுவினர்களில் சிவகார்த்திகேயன் மகள் ஆதாரனாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொதுவாக தமிழ் தாய் வாழ்த்து பாடத் தொடங்கியவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் அதேபோல் இந்த நிகழ்ச்சியிலும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் மகள் ஆதாரனா சிவகார்த்திகேயன் நடித்த கனா திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்பொழுது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்நிறைவு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் குழுவிலும் இருந்துள்ளார். அது குறித்த வீடியோக்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் ஆதாரனா பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இவ்வாறு இளம் வயதிலேயே இந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன் மகள். தற்பொழுது சிவகார்த்திகேயன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக டான் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றது. அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கள் கைகோர்த்துள்ளார்.

Leave a Comment