சிகிச்சை முடிந்த கையோடு நடிகை சமந்தா செய்த செயல்..! இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் கோபமா ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வந்த நடிகை என்றால் அவர் நடிகை சமந்தா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களுமே முன்னணியின் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த திரைப்படங்களாகவே அமைந்தது அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்து வந்த சமந்தா தனக்கென ஒரு இடத்தை திரை உலகில் பிடித்து விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான யசோதா என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் இந்த திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது நடிகை சமந்தா மிகவும் சோர்வாக இருந்தது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஏனெனில் சமந்தாவிற்கு மையோ சிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் இதன் காரணமாக அவர் சமீபத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் அவர் பெருமளவு சமூக வலைதள பக்கத்தில் முகம் காட்டுவது கிடையாது இந்நிலையில் சிகிச்சைக்காக தென் கொரியாவிற்கு சென்ற சமந்தா சமீபத்தில் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும் பொழுது தன்னுடைய சகுந்தலம் திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் கவனம் செலுத்தியுள்ள அப்பொழுது நடிகை சமந்தா அவர்கள் தான் டப்பிங் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த நேரத்தில் நீங்கள் இப்படி ஒரு செயலை செய்துதான் ஆக வேண்டுமா என கேள்வி எழுப்பிய நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளதன் காரணமாக தான் சமந்தா தன்னுடைய உடல் நலத்தை கூட கவனிக்காமல் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக போராடி வருகிறார்.

samantha-01223
samantha-01223

Leave a Comment