ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை..! மனம் மாறி சேர்ந்து வாழ முடிவெடுத்த தனுஷ் – ஐஸ்வர்யா..

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் தனுஷ்  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. சினிமா உலகில் வெற்றியை கண்டு வந்த..

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர் திருமணமாகி 18 வருடங்கள் வாழ்க்கையை சூப்பராக வாழ்ந்து வந்த இந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இதனால் இவரது இரு மகன்களும் சிறிது காலம் அப்பாவிடம் சிறிது காலம் அம்மாவிடமும் வாழ்ந்து வருகின்றனர் இவர்களை சேர்த்து வைக்க தனுஷ் குடும்பமும் சரி ரஜினி குடும்பமும் சரி பல தடவை முயற்சித்து  செய்து பார்த்தது ஆனால் எதுவுமே கைகூடவில்லை இருப்பினும் ரஜினி முயற்சியை கைப்பிடாமல் தொடர்ந்து தனது மகளையும் தனுசையும் சேர்த்து வைக்க முயற்சித்துக் கொண்டுதான் இருந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் தனுஷ், ஐஸ்வர்யாவையும் உட்கார வைத்த ரஜினி சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ரஜினி சொல்லி உள்ளது என்னவென்றால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்லியுள்ளார்.

ரஜினி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் சரியானது என்பதை உணர்ந்து கொண்ட இந்த ஜோடி மனம் மாறி தற்பொழுது பழசை மறந்து மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்தை கைவிட்டு இவர்கள் சேருவது உறுதி என சொல்லப்படுகிறது. இச்செய்தி தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment