அன்று தனுஷ் கேரக்டரில் நான் இன்று என்னுடைய கேரக்டரில் தனுஷ்..! ரசிகர்களை குழப்பிய பார்த்திபன்..!

இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் பார்த்திபன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிகர் மட்டுமின்றி சிறந்த இயக்குனரும் கூட.

அந்த வகையில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது மட்டும் இல்லாமல் இதற்காக பல பாசிட்டிவ் விமர்சனங்கள் இவருக்கு கிடைத்து வருகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் நமது பார்த்திபன் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று தரிசனம் வாங்கியுள்ளார் அந்த வகையில் அப்பொழுது பார்த்திபன் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர்  பத்திரிக்கையாளர்கள் கேட்கும் பல்வேறு கேள்விக்கு பதில் கொடுக்க வந்த நிலையில் அவர் தான் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் தனுஷ் தான் அது மட்டும் இல்லாமல் நான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அவர்தான் நடிக்க இருந்தார் அதன் பின்னர்தான் தனுசுக்கு பதிலாக நான் நடித்தேன்.

அதேபோல ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் நான் முதல் பாகத்தில் நடித்த கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் கலைஞர் தினேஷ் அவர்கள் என்னைவிட மிகப் பிரமாண்டமாக இந்த கேரக்டரில் நடிப்பாரு நடிகர் பார்த்திபன் அவர்கள் தெரிவித்தது ரசிகர்கள் மிகப் பெரிய ஆச்சரியத்தை உருவாக்கி உள்ளது.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளார்கள்.

Leave a Comment