அந்த நடிகர் செத்தா தான் எனக்கு தீபாவளி.. வயிறு எறிஞ்சி சொல்லும் பிரபல நடிகை…

80, 90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் முதலில் பாக்கியராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாயி, தர்மதுரை, ஊர் மரியாதை, ஆணழகன், ஜெய்ஹிந்த், ஜமீன் கோட்டை, ஆசை என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றிகளை கண்டார்.

திரை உலகில் வெற்றி கண்ட இவர் கடந்த சில வருடங்களாக படங்களை விமர்சிப்பது மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்கள், அவருடைய நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வெளிப்படையாக சொல்லி வருகிறார். அப்படி அண்மையில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கியவர்.

நடிகை ரேகா நாயரை பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்தார் இதற்கு கோபமடைந்த ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை நடு ரோட்டில் வைத்து  செம்ம சண்டை போட்டார் மேலும் அடிக்கவும் முயன்றார் அதன் பிறகும் இவர்களுக்கான மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை கிழிகிழின்னு கிழித்தார். அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. தனக்கு உண்மையான தீபாவளி பயில்வான் என்னைக்கு சாகுறானோ அன்னைக்கு தான் என்றும், என்ன பத்தி எவ்வளவு கேவலமா பேசிட்டாரு அந்த ஆளுக்கு இப்படி பேசுவதால் என்ன கிடைக்கிறது என விளாசினார்.

மேலும் பேசிய அவர் தனக்கு அந்த ஆளை பார்த்தாலே அவ்வளவு காண்டாகுது என்றும் தயவுசெய்து இதுக்கு மேல இந்த ஆளைப் பத்தி கேட்காதீங்க அப்புறம் பச்சை பச்சையா ஏதாவது சொல்லிவிடுவேன் என்றும் மொத்த கோபத்தையும் வெளியே கொட்டி தீர்த்தார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Leave a Comment