விடுதலைக் குடும்பம் சார்பாக நன்றிகள்.! அறிக்கையை வெளியிட்டு அசத்திய நடிகர் சூரி.!

கடந்த 31ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியாகி தற்பொழுது வரை வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் பல சினிமா பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் தற்பொழுது வரை  நல்ல வரவேற்பு தருகிறார்கள் விடுதலை முதல் பாகம் அவ்வளவு அருமையாக இருப்பதால் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் தற்பொழுதே கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக வெற்றிமாறன் எடுத்த இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பல சினிமா பிரபலங்களும் நடிகர் சூரி அவர்களை வாழ்த்தி வருகிறார்களாம் மேலும் சூரியின் நடிப்பு இந்த திரைப்படத்தில் அவ்வளவு அருமையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அந்த அளவிற்கு சூரி தனது நடிப்புத் திறமையை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து பார்த்தால் சூரியின் நடிப்பை பார்த்த பல சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் இவரது ரசிகர்களும் இவருக்கு நாள்தோறும் சமூக வலைதள பக்கங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் இந்நிலையில் அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக  நன்றி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில் அவர் என்ன பதிவு செய்துள்ளார் என்று கேட்டால் அனைவருக்கும் வணக்கம் மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன் இறைவனுக்கு நன்றி விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றி படமாக்கிய ரசிகர்கள்,பொதுமக்கள், சமூக வலைதள நண்பர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

எனவும் பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிக்கை,தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment