தங்கச்சி ஸ்ரீதேவி நல்லா டிராமா போட்டுவார்..12 கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன் – வனிதா ஓபன் டாக்

Vanitha : நடிகை வனிதா எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் அப்படிதான் தற்பொழுது தனது குடும்பத்தை பற்றிய வனிதா பேசியது சமூக வலைதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.  அவர் சமீபத்திய பேட்டி சொன்னது என்னவென்றால்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் நான் பங்கேற்கவில்லை என்றால் இன்று நான் இந்த இடத்தில் இருந்திருக்கவே மாட்டேன். தனது முதல் மகன் ஸ்ரீஹரி மற்றும் இரண்டு மகள்களும் நிச்சயமாக சினிமாவுக்கு தான் வருவார்கள் என்று அடித்து கூறியுள்ளார் வனிதா நான் காதலை பிரித்து விடுவேன் என்ற பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை நான் இதுவரை 12 பேருக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன் என்று வனிதா கூறியுள்ளார். ஒருமுறை காதலர் தினத்திற்கு தன் தாயாருக்கு ஐ லவ் யூ என்று கிரீட்டிங் கார்டு எழுதி கொடுத்ததாகவும் ஆனால் அது அவருக்காக வாங்கவில்லை அப்பொழுது நான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதை என் அம்மா பார்த்து விட்டார் உண்மையை சொன்னால்..

அடி விழும் என பயந்து உங்களுக்கு தான் வாங்கினேன் என்று கூறி ஏமாற்றி தப்பித்து விட்டேன் என்று வனிதாவுக்கு தெரிவித்தார் மேலும் பேசியவர் சிறு வயதிலிருந்து தாயார் மஞ்சுளா என்னையும், என் தங்கை பிரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் ஒரு பொழுதும் அடித்தது இல்லை அதற்குக் காரணம்..

குழந்தையிலிருந்து ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுவார் ரூமுக்குள் சென்று கதவை தாழையிட்டுக் கொண்டு கண்ணில் பட்ட எல்லா பொருட்களையும் போட்டு உடைத்து விடுவார் சிறுவயதிலிருந்து ஸ்ரீதேவி சரியான பிராடு நல்லா டிராமா செய்து எல்லோரையும் ஏமாற்றி விடுவார் அதனால் ஸ்ரீதேவியை மட்டும் யாரும் அடிக்கவே மாட்டார்கள் என அந்த பேட்டியில் கூறினார்.

Leave a Comment