புள்ளைய கிள்ளி விட்டுட்டு தொட்டிலை ஆட்டுகிறானா அர்ஜூன்.! மொத்த உண்மையையும் கூறும் கோதை.! புரிந்து கொள்வாரா ராகினி.. தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

Thamizhum saraswathiyum today episode october 9 : தமிழும் சரஸ்வதியும் இன்றய எபிசோடில் தமிழ் கம்பெனி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது அந்த சமயத்தில் அர்ஜுன் வந்து ஆறுதல் சொல்வது போல் நக்கலாக பேசுகிறார் இதனால் கோபப்பட்ட கோதை கன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த நிலைமைக்கு காரணமே நீ தான் அந்த கம்பெனியை எரிச்சதும் நீ தான் எனக்கு நல்லாவே தெரியும் எங்க எல்லாருக்கும் தெரியும் ரொம்ப நடிக்காத என பேசுகிறார்.

ஆனால் பரமன் நாங்கள் ஆறுதல் சொல்ல வந்தோம் என கூற நீ அடி வாங்கணுமா என கேட்க அமைதியாக ஓரமாக நிற்கிறார். ஒழுங்கா இங்க இருந்து போய்டு இல்லன்னா எங்க கையாலே அடிவாங்கி செத்துருவ என கோதை மிரட்டுகிறார் அர்ஜுனும் கிளம்புகிறார் அந்த சமயத்தில் உன்ன நம்பி என் புள்ள தமிழ நம்பாமல் இருந்தேன் அதனாலதான் இன்று வரைக்கும் என் பிள்ளை என்கிட்ட பேசல அவன் கொடுக்குற தண்டனையா இருந்தாலும் அதை நான் மணப்பூர்வமா ஏத்துக்குறேன் என பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் ஒரு பீனிக்ஸ் பறவை-டா எவ்வளவு அழித்தாலும் மீண்டும் வருவான்.. அர்ஜுனிடம் சவால் விடும் கோதை.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

இந்த நிலையில் திடீரென தமிழ் கோதை கையை பிடித்து அம்மா என கூப்பிடுகிறார் பாசம் மழையில் இருவரும் பொழிகிறார்கள் அடுத்த காட்சியில் அர்ஜுன் வீட்டிற்கு செல்கிறார் கம்பெனி மட்டும்தான் எரிஞ்சது ஆளுங்களுக்கு எதுவும் ஆகல ஒரு சின்ன காயம் கூட படல என கூறிக் கொண்டிருக்கிறார் ராகினியிடம் அந்த சமயத்தில் அர்ஜுனின் அக்கா எதுவுமே ஆகலயா என வருத்தப்படுவது போல் பேச ராகினிக்கு  சந்தேகம் வருகிறது.

Thamizhum saraswathiyum today latest episodes
Thamizhum saraswathiyum today latest episodes

பிறகு அனைவரும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள் உடனே ராகினி அவர்களுக்கு ஏதாவது நம்ம ஹெல்ப் பண்ணனும் கூறிக் கொண்டிருக்கிறார். அர்ஜுனும் அதான் நானும் யோசிச்சேன் என்ன நடித்துக் கொண்டிருக்கிறார் ராகினி இடம். மற்றொரு பக்கம் தமிழ் தன்னுடைய கம்பெனிக்கு இன்சூரன்ஸ் போட்டுள்ளதை கிளைம் பண்ண சென்றுள்ளார் ஆனால் இன்சூரன்ஸ் கம்பெனி காரர்கள் 60% மட்டுமே பணம் தர முடியும் அதுவும் விசாரித்துக் கொண்டுதான் தர முடியும் என கூறி விடுகிறார்கள்.

அர்ஜுன் கன்னத்தில் ஓங்கி அறைந்த கோதை.! மொத்தமாக பற்றி எரிந்த தமிழ் கம்பெனி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

மற்றொரு பக்கம் தமிழ் வீட்டில் அனைவரும் கம்பெனி எரிந்தது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இன்சூரன்ஸ் பணம் கிடைத்தால் கொஞ்சம் சப்போர்ட்டாக இருக்கும் என கூற அதற்கு நடேசன் இன்சூரன்ஸ் பண்ணும் கிடைத்தாலும் டெலிவரி பண்ண வேண்டிய நேரத்தில் டெலிவரி பண்ண முடியவில்லை அவர்களிடம் டைம் கேட்க வேண்டும் இப்பதான் ஆரம்பிச்சு நல்ல நிலைமைக்கு வந்தான் தமிழ் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிட்டான் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

Thamizhum saraswathiyum today episodes
Thamizhum saraswathiyum today episodes

அந்த சமயத்தில் ராகினி போன் பண்ணுகிறார் கோதை அட்டென்ட் பண்ணி பேசுகிறார் அப்பொழுது நடந்த அனைத்தையும் கேள்விப்பட்டேன் எனக் கூற அதற்கு கோதை அதெல்லாம் தமிழ் சமாளிச்சுருவான் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் நாங்க வேணா ஏதாவது பினான்சியல்லா ஹெல்ப் பண்ணட்டுமா என ராகினி கேட்க அர்ஜுன் கிட்டயும் சொல்லிட்டேன் அவரும் பண்ணலாம்னு சொல்லிட்டாரு என பேசிக்கொண்டு இருக்க அந்த சமயத்தில் கோதை இந்த சம்பவத்துக்கு காரணமே உன் புருஷன் அர்ஜுன்தான்.

புள்ளைய கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டுகிறானா அங்க கம்பெனி எரிச்சிட்டு இங்க நல்லவன் மாதிரி உன் கிட்ட வந்து நடிக்கிறான் என மொத்த உண்மையையும் கோதை கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.