மேக்னா எடுத்த அதிரடி முடிவு.. இனி படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் தமிழ் – Thamizhum Saraswathiyum

Thamizhum Saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் குடோனில் கட்டி வைத்திருந்த தமிழ் தப்பித்து வந்து நேரடியாக ஹாஸ்பிடல்லில் இருக்கும் மேக்னாவை மீட் பண்ணுகிறார் அப்பொழுது மேக்னா கத்த பார்க்கிறார் நான் எதற்காக வந்தேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறேன் என தன் மீது உள்ள நியாயத்தை கூறுகிறார்.

ஒரு பெண்ணாக இவ்வளவு இளம் வயதில் 30 கம்பெனிக்கு ஓனராக இருக்கிறீர்கள் அது பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது நான் கை நீட்டி அடித்து இருக்கக் கூடாதுதான் ஆனால் அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்களும் கொஞ்சம் புடிவாதமாக இருந்தீர்கள் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் உங்களை காப்பாற்றுவதற்காக தான் புடவையை நான் உறவினேன் நீங்க ஏதும் தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள்.

thalapathy 68 storyline : தளபதி 68 கதை இணையதளத்தில் லீக்.? அட இந்த கதை விஜய்க்கு செட் ஆகுமா.?

ஒரு பெண்ணுக்கு மானம் என்பது மிகவும் அவசியம் நான் அந்த மாதிரி உங்களை அசிங்கப்படுத்துவதற்காக அப்படி செய்யவில்லை என தன் மீது உள்ள நியாயத்தை கூறுகிறார்.  சொல்லிவிட்டு வெளியே சென்ற பொழுது  தமிழ் மேகனாவின் மாமா களிவரதனிடம் மாட்டிக் கொள்கிறார். உடனே தமிழ் மற்றும் நமச்சி இருவரையும் பிடித்து குடோனில் மீண்டும் கட்டி வைக்கிறார்கள்.

மேக்னா மாமா மேக்னாவிடம் பேசும்பொழுது அவனை என்ன பண்ணலாம் என கேட்க அவர விட்டுருங்க நான் தான் தப்பா நினைச்சுகிட்டேன் அவர் ரொம்ப நல்லவரு என்ன காப்பாத்துனதும் அவர்தான் டாக்டர் சொல்லி தான் எனக்கே தெரியுது அவரை அழைத்துக்கொண்டு நம்ம வீட்டுக்கே வாங்க அவருக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும் என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் உங்க பிரண்டு உமாபதி சொல்லித்தான் அவர் இங்க வந்து இருக்காரு பிசினஸ் விஷயமா அத நம்ம புரிஞ்சுக்காம அவகிட்ட நானும் தப்பா நடந்துகிட்டேன் அதனால மன்னிப்பு கேட்க வேண்டும்  என பேசுகிறார்.

சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் S 43 பட டைட்டில் வெளியானது.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால் மேக்னா பேசியதிலிருந்து தெரிகிறது தமிழை மேக்னாவுக்கு பிடித்து விட்டது என இதனை கலிவரதனும் தெரிந்து கொள்கிறார் உடனே தமிழை விடுவித்துவிட்டு நடந்த அனைத்தையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் தமிழ வச்சி தான் மொத்த சொத்தையும் நம்ம ஆட்டைய போடணும் என கலிவரதனும் அவரின் மகனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நமச்சியை வைத்து தான் காரியத்தை சாதிக்க முடியும் என எண்ணி நமச்சி அங்கு இருக்கும் பொழுது மேகனா இவங்களுக்கு கம்பெனியை கொடுப்பாளா இல்லையா என்று தெரியலையே அதுமட்டுமில்லாமல் தமிழுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா எப்படி தருவா இளைஞர்களுக்கு மட்டும் தானே அவர் ஹெல்ப் பண்ணுவா என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இது அனைத்தும் மேக்னாவின் சொத்தை ஆட்டையை போடுவதற்காக தான் இருவரும் பிளான் பண்ணுகிறார்கள் இது தெரியாமல் நமச்சி அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version