குடோனில் தமிழை கட்டி வைத்திருக்கும் மேக்னாவின் மாமா.! உனக்கு சக்காளத்தியா ஒருத்தி வரப்போறா சரஸ்வதிக்கு குறி சொன்ன பாட்டி..

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் பெங்களூருக்கு செல்கிறார் அந்த சமயத்தில் நமச்சி ஒரு பெண்ணை இடித்து விடுகிறார் அந்த பெண்தான் மேக்னா ஆனால் அவர் நமச்சியை செவுளில் அறைந்து விடுகிறார் இதனால் கோபப்பட்ட தமிழ் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அதை விட இரண்டு மடங்கு தருவேன் என கோபத்தில் இருக்கிறார் உடனே அவர் மன்னிப்பு கேட்காததால் மேக்னாவை இரண்டு அரை அறைந்து விடுகிறார் தமிழ்.

மேக்னாவை அறைந்ததால் செம கடுப்பில் இருக்கிறார் மேக்னா அதனால் இவரை எங்கிருந்தாலும் தூக்கி வரச் சொல்லி போன் பண்ணுகிறார். வீட்டிற்கு போன மேக்னா செம கோவத்துடன் இருக்கிறார். அந்த சமயத்தில் டொனேஷன் வாங்குவதற்காக அனாதை ஆசிரமத்தில் இருந்து வருகிறார்கள் அப்பொழுது செக் எழுதி கொடுக்கிறார் அதும் பெருந்தொகையாக இதனால் மேக்னாவின் மாமா நம்மள்ட்ட இப்ப இருக்கு தரோம் இல்லாத பக்கம் வந்து கேட்டாங்கன்னா என்ன பண்ண முடியும் என கேட்க இருக்கும்போது தானே தரும் இல்லாதப்ப பாத்துக்கலாம் என பேசுகிறார்.

மேலும் மேக்னாவை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார் வேலைக்காரம்மா ஆனால் மேக்னா அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என ஆபீசுக்கு கிளம்பி இருக்கிறார் ஆபீஸ்க்கு கிளம்பி போய்க் கொண்டிருக்கிறார் இவரை பார்த்தவுடன் எம்பிளாய் அனைவரும் பதறி அடித்து போய் உட்காருகிறார்கள் இங்குதான் தமிழ் நமச்சி இருவரும் வந்துள்ளார்கள்.

மேக்னா உள்ளே இருந்து சிசிடிவி காட்சியை பார்த்து அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்புங்கள் என கூறுகிறார். ஆனால் நமச்சி இங்க இருந்தா நமக்கு தான் ஆபத்து வா உடனே போயிடலாம் என கிளம்பும் நேரத்தில் ரிசப்ஷனில் இருந்து இவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மேக்னாவின் புடவை பற்றுகிறது உடனே தமிழ் புடவை உருவி தீயை அணைக்கிறார்.

எரிகின்ற தீயை அணைச்சுவிட்டார் ஆனால் மேக்னா மனதில் தீ உருவாகிவிட்டது தமிழ் மீது. உடனே மேக்னாவின் மாமா வந்து தமிழ் மட்டும் நமச்சி இருவரையும் அழைத்து சென்று குடோனில் கட்டி போடுகிறார். மேகனா மயங்கி விழுந்ததால் அவரை ஹாஸ்பிட்டலில் சேர்க்கிறார்கள் ஹாஸ்பிடலில் கண் முழித்த மேகனா நலமாக இருக்கிறார்.

மற்றொரு பக்கம் சரஸ்வதி குறி கேட்க வருகிறார் அப்பொழுது உங்களுடைய கணவர் ஒரு வேலை விஷயமாகவே ஒரு பயணம் சென்றுள்ளார் அங்கு அவர் போன காரியம் கண்டிப்பாக நிச்சயமாக வெற்றி பெறும் ஒரு புது பந்தம் உருவாக போகிறது அந்த பந்தத்தால் உங்களுக்கு நன்மை ஏற்படும். அதேபோல் சில தீங்குகளும் வரும் நீதான் உஷாராக இருக்க வேண்டும் என கூறுகிறார் அதாவது தமிழ் மீது அந்தப் பெண் ஆசைப்படுவதை தான் இலை மறைக்காயாக  அந்த குறி சொல்லும் பெண் கூறுகிறார்.

மற்றொரு பக்கம் மேகனா கண்விழித்து அவர்களின் மாமாவிடம் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் இருவரையும் குடோனில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறேன் என கூறுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.