கையெடுத்தெல்லாம் கும்பிட்டியேப்பா.. அப்ப நீ இன்னும் திருந்தலையா… அக்கா புருஷனை அடித்து துவைக்கும் அர்ஜுன்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராகினிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்துடுச்சு என அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வசு நீங்க ராகினி மேல கோவமா இருக்கீங்கன்னு நினைச்சேன் மாமா ஆனா நீங்க இப்படி இவ்ளோ பாசமா இருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல எனக் கூற என்னதான் இருந்தாலும் என் தங்கச்சி என தமிழ் கூறுகிறார்.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சு ஆனா கம்பெனி பிரச்சனை தான் அப்படியே இருக்கு என பேசுகிறார்கள் அதற்கும் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்க அடுத்த நாள் ஹாஸ்பிடலில் நமச்சி சாப்பாடை கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

ஆனால் அந்த அர்ஜுன் குடும்பம் இவங்க இங்கேயே டாரா போட்டுருவாங்க எப்படியாவது இவங்கள கட் பண்ணி விட வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் கோதை வைத்திருக்கும் குழந்தையை வெடுக்கென புடுங்குகிறார் அர்ஜுனின் அம்மா. அதற்கு குழந்தை அம்மாகிட்ட இருக்கட்டும் என ராகினி  கூற அர்ஜுனும் அதையே கூறுகிறார்.

பிறகு தமிழ் சரஸ்வதி என அனைவரும் குழந்தையை பார்க்க வருகிறார்கள் அனைவரும் குழந்தை கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ராகினி அனைவரும் நம்ம வீட்டுக்கு போகலாம் என கூப்பிடுகிறார் ஆனால் தமிழ் அது முடியாது என கூறி விடுகிறார் அம்மாவாது என் கூட இருக்கட்டும் என கூற அதற்கு கோதை அது சரிப்பட்டு வராது, நீ வேணா எங்க கூட வந்து இரு என பேசுகிறார்கள்.

இதனால் அர்ஜுன் குடும்பம் அதிர்ச்சடைகிறது அதெல்லாம் வேண்டாம் நாங்களே பாத்துக்கிறோம். சரஸ்வதி கர்ப்பமா இருக்கா கை குழந்தை வேற இருக்கு அதனால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எங்கள் பேரக்குழந்தை என பேசுகிறார்கள். அடுத்த காட்சியில் அர்ஜுன் குழந்தையை தூக்கி கொண்டு வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது ராகினி ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு அனைவரும் ஒரு ரூமுக்குள் ரகசியம் பேச போகிறார்கள்.

அப்பொழுது தன்னுடைய அக்கா மாமாவை அர்ஜுன் செவுலில் அறைந்து புரட்டி எடுக்கிறார் எல்லா பிரச்சினையும் உன்னால தான் நீ ஒழுங்கா குடிச்சிருந்தத அப்பவே சொல்லி இருந்தா நான் வேற ஏதாவது பண்ணி இருப்பேன் எல்லா பிரச்சினையும் பண்ணிட்டு இப்ப என்ன இங்க வந்து நாடகம் ஆடுறியா என திட்டுகிறார்.

நான் எதுக்காகவும் மாற மாட்டேன் தமிழ் எனக்கு ஹெல்ப் பண்ணா அதுக்காக தான் நன்றி சொன்னேன் ஆனா பகையை மட்டும் மறக்கவே மாட்டேன் என்ன மாதிரியே அவங்க நடுத்தெருவுக்கு வரணும் என சபதம் போடுகிறார். அடுத்த காட்சியில் வசு, சரஸ்வதி, கோதை, கார்த்தி என அனைவரும் கோவிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த கம்பெனி பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்காதா என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மணி அடிக்கிறது அதனால் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறார்கள் இத்துடன் தமிழும் சரஸ்வதியும் எபிசோடு முடிகிறது.