ஹெல்ப் பண்ண வந்த ஆதியை அலறவிட்ட அர்ஜுன்.! பிச்சை எடுக்கிற நிலைமையில் தான இருக்கீங்க என தமிழைஅசிங்கப்படுத்தும் ராகினி புருஷன்…

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் தூங்காமல் நடந்து கொண்ட யோசித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது வந்த கோதை நீ இன்னும் தூங்கலையா தமிழ் என கேட்க தூக்கம் வரவில்லை என்பது போல் கூறிக் கொண்டிருக்கிறார் உடனே ஆறுதலாக நாலு வார்த்தை கோதை பேசுகிறார் தமிழ் உங்கள் மடியில் நான் படுத்துக் கொள்ளவா அம்மா எனக்கேட்க  கோதை சந்தோஷப்படுகிறார்.

அடுத்த காட்சியில் அதிகாலையில் அனைவரும் என்ன பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆதி காலையில் வர சொன்னான் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னான் எனக் கூற சரி நேரடியா போய் நம்ம பணத்தை வாங்கிக்கலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் உடனே ஒரு டீ கிடைக்குமா என நடேசன் கேட்க டி எல்லாம் தேவையில்லை அதைவிட ஒரு எனர்ஜி ட்ரிங்க் இருக்கு என தமிழ் கூறுகிறார்.

thamizhum saraswathiyum today episode october 11 2
thamizhum saraswathiyum today episode october 11 2

உடனே அருகம்புல் ஜூசை எடுத்துக்கொண்டு வரும்பொழுது அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா இதெல்லாம் தேவையில்லை என நமச்சி நடேசன் வசு மூன்று பேரும் கதறுகிறார்கள். ஒருவழியாக அருங்கம்புள் ஜூசை குடித்துவிட்டு ஆதி ஆபீசுக்கு கிளம்புகிறார்கள் ஆனால் ஆதி ஆபீசில் அர்ஜுன் தன்னுடைய நண்பர் மூலம் இன்கம்டேக்ஸ் ஆபிஸர்களை உள்ளே நுழைய வைத்து விட்டார்கள்.

இன்கம் டேக்ஸ் ஆபிஸர்கள் அனைவரும் உள்ளே வந்து உங்க அக்கவுண்ட் ஃப்ரீஸ் பண்ணியாச்சு நீங்க ஏதோ இல்லிகளாக பணம் வாங்குகிறீர்கள் என கேள்வி பட்டேன் என கூறிக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில்தமிழ் சரஸ்வதி கார்த்தி நமச்சி  ஆதி ஆபிஸ்க்கு வருகிறார்கள் அப்பொழுது ஆதியை பார்க்க வேண்டும் எனக் கூற இன்கம் டேக்ஸ் ஆபீஸர்கள் உள்ளே விட மறுக்கிறார்கள் உடனே ஆதி வெளியே வந்து அவர்களுடன் பேசுகிறார்கள்.

இந்த நிலையில் மற்றொரு பக்கம் அர்ஜுன் தமிழ் கம்பெனி தொழிலாளிகளை பார்த்து இனிமே சம்பளம் இல்லாமல் என்ன பண்ணுவீங்க இந்த நஷ்டத்தை ஈடுகெட்ட ஒரு வருஷம் ஆகும் ஒரு வருஷம் சம்பளம் இல்லாம வீட்ல அடி வாங்க போறீங்களா என பேசிக் கொண்டிருக்க உடனே உங்கள எல்லாரும் ஆளுக்கு ரெண்டு பேரு அந்த கம்பெனியில் இருந்து என் கம்பெனிக்கு வந்து ஜாயின் பண்ணிக்கோங்க என ஆபர் கொடுக்கிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் தங்களுக்கு முதலில் லோன் கொடுத்த பேங்க் ஆபீஸரை பார்த்து லோன் கேட்கப் போகிறார் ஆனால் பேங்க் ஆபிஸர் லோன் கொடுக்க முடியாது இதற்கு மேல் எனக்கு கூறி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் எந்த பேங்க் சென்றாலும் இனிமேல் லோன் உங்களுக்கு கிடைக்காது ஏனென்றால் இதற்கு முன் எடுத்த லோனில் 50 சதவீதத்தை கட்டினால் மட்டுமே லோன் கொடுப்பார்கள் என கூறி விடுகிறார்கள்.

பேங்கில் இருந்து வெளியே வந்த தமிழிடம் அர்ஜுன் நக்கலாக பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் நான் கொடுத்த பணத்தை அப்பவே வாங்கிக்கிட்டு இருந்தா இந்த பிரச்சனையே கிடையாது இல்ல தேவையில்லாம இப்ப எதுக்கு அலையறீங்க என மிகவும் நக்கலாக பேசுகிறார் அப்பொழுது நமச்சி எங்க சொத்தை பிடுங்கி கிட்டு எங்களுக்கே பிச்சை போடுறியா என கேட்க அதற்கு அர்ஜுன் இப்ப பிச்சை எடுக்கிற நிலைமையில் தான் நீங்க இருக்கீங்க என பேசுகிறார் இதனால் தமிழ் முகம் வாடுகிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.