உண்மையை வெளிப்படுத்தி கையெழுத்து போடுவதை தடுத்து நிறுத்திய தமிழ்.! உன்ன போய் நம்புனனே அர்ஜுன்.. நீயா இப்படி பண்ணுனது கடுங்கோபத்தில் ராகினி.!

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் தன் மீது அனைத்து சொத்துக்களையும் மாற்ற ராகினியை நம்ப வைத்து ரிஜிஸ்டர் செய்ய ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு வந்துள்ளார் அப்பொழுது அர்ஜுன் கையெழுத்து போட்டு விட்டார் ஆனால் ராகினி கையெழுத்து போடும் சமயத்தில் கோதை தடுத்து நிறுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் கையெழுத்து போடுவதற்கு முன்பு இதை நீ தெரிந்து கொள் என பேசுகிறார்.

அந்த சமயத்தில் தமிழ் அர்ஜுன் மீது பொருளை போட சொன்னது நான் கிடையாது அர்ஜுனின் மாமா பரமுதான் என நிரூபிக்கிறார் அது மட்டும் இல்லாமல் பொருளை போட சொன்ன வரை அழைத்து வந்து யார் இதை செய்ய சொன்னது என்பதை திட்டவட்டமாக கூறுகிறார். இதை எப்படி கண்டுபிடிச்சேன் என்பதை தமிழ் கூறுகிறார் அதாவது பொய் சொன்னா நபர் வீட்டிற்கு சென்று அவரின் மனைவியிடம் நடந்ததை கூறுகிறார் தமிழ்.

அவரின் மனைவி இந்த ஐயா எப்படி தமிழுக்கு ஒரு துரோகம் செய்ய உன்னால மனசு வந்தது நம்ம குழந்தைக்கு உடம்பு சரியில்லாதப்ப இருந்தப்ப தமிழ் தானே பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணாரு, அப்ப கூட உன் சம்பளத்துல பிடிக்கலையே ஆனா அவருக்கு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சிருக்க, நீ செயின் வாங்கி கொடுக்கும்போதே நான் யோசிச்சேன் நீ ஏதோ சீட்டு பணம் சொல்லி என்னை ஏமாத்திட்ட ஒழுங்கா போய் எல்லாம் உண்மையை சொல்லிடு இல்லன்னா நானும் குழந்தையும் உன்னை விட்டு போயிடுவோம் என மிரட்டுகிறார்.

இது அனைத்தையும் ராகினியிடம் சொல்ல ராகினி அர்ஜுனனை பார்த்து உங்கள போய் இப்படி நம்புனனே நீங்க இப்படி ஒரு துரோகத்தை செய்வீர்கள் என்று நான் நினைச்சு கூட பாக்கல இனிமே எக்காரணத்தை கொண்டும் சொத்து உங்க பேருக்கு எழுதிய வைக்க மாட்டேன் இதுதான் என்னோட கடைசி முடிவு என கூறி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் ராகினி வீட்டிற்கு சென்றவுடன் எங்கே அடி வயிறு கருகிற மாதிரி இருக்கே என நமச்சி நக்கல் செய்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பரமு வையும் எழுதாத சொத்துக்கு எதுக்குடா பேக் இதையும் எடுத்துட்டு போ என தூக்கி போடுகிறார் வீட்டிற்கு சென்ற ராகினி கடும் கோபத்தில் இருக்கிறார் அப்பொழுது அர்ஜுனின் அக்கா மற்றும் அம்மா இருவரும் என்னாச்சு ஏன் இவ்வளவு கோவமா இருக்க என கேட்க அதை போய் உங்க மகன் கிட்டயே  கேளு என திட்டவட்டமாக கூறுகிறார். அப்பொழுது அர்ஜுன் வந்து இறங்கியதும் தன்னுடைய மாமாவை லெஃப்ட் அண்ட் ரைட் அடித்து துன்புறுத்துகிறார்.

அதுமட்டுமில்லாமல் வீட்டை விட்டு வெளியே போங்க என கூறுகிறார் அப்பொழுது அர்ஜுனின் மாமா ராகினி இடம் மன்னிப்பு கேட்க பிறகு ராகினி இதுதான் லாஸ்ட் வார்னிங் இதுக்கு மேல இது மாதிரி நடந்துச்சுன்னா அவ்வளவுதான் என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜுனிடமும் நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன் நீங்க தான் இந்த மாதிரி செய்ய சொன்னீங்கன்னு நினைச்சேன் என பேசுகிறார் அப்பொழுதுதான் அர்ஜுன் பெருமூச்சு விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.