தமிழ் கம்பெனியில் திருடிய கருப்பு ஆட்டை நாசுக்காக மடக்கிப்பிடித்த சரஸ்வதி.? வீட்டிற்கு போன நமசிக்கு காத்திருந்தது அதிர்ச்சி..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் அப்பா சொத்தை சரி பாகமாக பிரித்து தமிழிடம் கொடுக்க வந்துள்ளார். ஆனால் தமிழ் எதற்காக வந்தீர்கள் என அவமானப்படுத்துகிறார் சரஸ்வதி எவ்வளவு சொல்லியும் தமிழ் கேட்பது போல் தெரியவில்லை, அதேபோல் இந்த பத்திரத்தை வாங்கவும் தமிழ் மறுக்கிறார், நாம் முன்னாடி சொன்னதுதான் நான் உங்க சொத்துக்காக ஆசைப்பட்டது கிடையாது. என்னோட சொந்த உழைப்பில் முன்னேறுவேன் எனக்கு பக்க பலமா இவங்க ரெண்டு பேரும் இருக்காங்க என சரஸ்வதி நமச்சி இருவரையும் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் சந்திரகலா வசு குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் கார்த்தி கம்பெனிக்கு போகலாமா அர்ஜுன் என கார்த்தி கேட்க அத்தை வரேன் என்று கூறியதாக அர்ஜுன் கூறுகிறார். உடனே கோதை வந்தவுடன் கோதையின் மகள் வெளியே வந்து தமிழிடம் கம்பெனியை தூக்கி கொடுத்துட்டீங்க இனி அவன் இந்த ரெண்டு கம்பெனிக்கு என்னென்ன பிரச்சனை செய்யப் போறானோ எனக் கூற.

அந்த சமயத்தில் கோதையின் கணவர் உள்ளே வருகிறார் தமிழ் பத்திரத்தை வாங்காததை நினைத்து மிகவும் பெருமைப்பட்டுக் கூறுகிறார் வசுவும் தமிழ் சொத்துக்காக ஆசைப்பட்டது கிடையாது என்பதை கோதைக்கு புரிய வைக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழே பெத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் என கோதையின் கணவர் கூறுகிறார். கோதையின் மனசு மாறுவதற்குள் அர்ஜுனனின் குடும்பம் மொத்த சொத்தையும் ஆட்டைய போட தான் தமிழ் இந்த பிளான போட்டு இருப்பான் என ஏற்றி விடுகிறார்கள்.

பிறகு சொத்து பிரிப்பதை இத்துடன் நிறுத்தி விடுங்கள் என அர்ஜுன் கூற கோதையும் அதை ஒப்புக்கொண்டு இதைப் பற்றி இனிமே யாரும் பேச வேண்டாம் என கூறிவிடுகிறார். அடுத்த காட்சியில் அர்ஜுனின் அக்கா ஏண்டா சொத்து வேணாம்னு சொன்ன அதான் எல்லாம் கை கூடி வருதே எனக் கூற அதற்கு அர்ஜுன் மொத்த சொத்தையும் ஆட்டைய போட்டு ஆகணும் அதுதான் எனக்கு வேணும் என அர்ஜுன் கூறுகிறார்.

அடுத்த காட்சியில் தமிழ் கம்பெனியில் சரஸ்வதி யோசித்துக் கொண்டிருக்க உடனே சிசிடிவி கேமரா இருக்கிறதா என கேட்க பக்கத்து கம்பெனியின் ஆப்போசிட்டில் இருக்கிறது ஆனால் யாருமே வந்தது போல் தெரியவில்லை. எனக் கூற உடனே சரஸ்வதி அப்பன்னா இங்கே இருக்கிறவங்க தான் யாரோ எடுத்து இருப்பாங்க நான் எல்லாத்துகூடையும்  தனித்தனியா பேசணும் நான் கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார் சரஸ்வதி.

பிறகு ஒவ்வொரு ஆளாக அழைத்து எங்களால் சம்பளம் கொடுக்க முடியாது அது கொஞ்சம் டைம் ஆகும் நீங்க வேற வேலைய பாத்துக்கோங்க எனக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு ஆளாக தமிழ் நல்ல உள்ளத்தை புரிந்து கொண்டு இங்கே தான் இருப்பேன் என கூறுகிறார்கள். ஆனால் கடைசியாக வந்த நபர் மட்டும் கொஞ்சம் ஓவராக பேசுகிறார் இதை பார்த்து சரஸ்வதி சந்தேகம் அடைகிறார் உடனே நமச்சிவை கூட்டிக்கொண்டு சரஸ்வதி கடைசியாக பேசிய நபரின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு புது பைக் இருப்பதை பார்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் புது டிவி, புது வாஷிங் மெஷின், புது பிரிட்ஜ் என அனைத்து பொருட்களும் இருக்கிறது இதனால் சந்தேகம் அடைந்த சரஸ்வதி அவரின் மனைவியிடம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாங்க போதும் எனக் கூற அவரின் கை நடுக்கிறது இதை வைத்து கண்டுபிடித்து விடுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment