காணாமல் போன அர்ஜுனை பரமு தான் கடத்தினாரா.. சூழ்ச்சியை கண்டுபிடிப்பாரா தமிழ்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் குடும்பம் அனைவரும் தமிழ் தான் அர்ஜுனை கடத்திருக்க வேண்டும் டெண்டர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்திருப்பார் அதனால் உடனடியாக போலீஸ் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள் ஆனாலும் ராகினி அண்ணன் இப்படி செய்ய அவசியமே கிடையாது எனக்கூறி பார்க்கிறார்.

ஆனாலும் அர்ஜுன் குடும்பம் அய்யய்யோ என் மகனை என்ன செஞ்சிருக்கானோ தெரியலையே என ராகினியை பயன்படுத்துகிறார்கள் உடனே ராகினி சரி வாங்க நம்ம நேரடியா அண்ணன் கிட்டயே போய் கேட்கலாம் என அனைவரும் கிளம்புகிறார்கள். ராகினி தமிழிடம் சென்று அர்ஜுன் நீங்க தான் கடத்தி வச்சிருக்கீங்களா என கேட்கிறார் அதற்கு நான் எதுக்கு கடத்த போறேன் எனக்கு அவசியமே கிடையாது என பேசுகிறார். ஒரு வழியாக ராகினியை புரிய வைத்து அனுப்பி விடுகிறார்கள்.

ஆனாலும் வீட்டிற்கு சென்றவுடன் அர்ஜுனை காணவில்லை அதனால் போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணலாம் என கூறுகிறார்கள் உடனே 24 மணிநேரம் ஆனால் தான் கம்ப்ளைன்ட் பண்ண முடியும் என கூறி விடுகிறார். இரவு முழுவதும் பார்த்துவிட்டு அடுத்த நாள் காலையில் அர்ஜுன் வராததால் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்கள். போலீஸ் ராகினி பரமு அனைவரும் தமிழ் வீட்டிற்கு சென்று தமிழிடம் விசாரிக்கிறார்கள் தமிழ் நான் எதுக்கு கடத்த போறேன் எனக்கு அந்த தேவையே கிடையாது எனக் கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பரமு இவன் தான் கடத்திருப்பான் என வார்த்தையை விடுவதால் தமிழ் அடிக்கப் போகிறார் உடனே என்ன தமிழ் இப்படி எல்லாம் கை ஓக்கறீங்க என போலீஸ் கேட்கிறார்கள் நான் எதுவும் பண்ணல சார் ஆனாலும் இவங்க இப்படி பேசுறது எனக்கு கோபத்தை உண்டு பண்ணுது என கூறுகிறார் உங்கள் கோபம் தான் நீங்க உங்களை சந்தேகப்பட வைக்குது என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க நான் கண்டிப்பா தேடி கண்டுபிடிக்கிறேன் என போலீஸிடம் டைம் கேட்கிறார் தமிழ். உங்களுக்கு அப்படி சந்தேகம் இருந்தால் ஏதாவது எவிடன்ஸ் இருக்கா நான் தான் கடத்தினேன் என்பதற்கு என கேட்கிறார். அப்படி எதுவும் கிடையாது ஆனால் உங்களுக்குடைம் கொடுக்கிறேன். உடனே பரமும் அந்த தமிழ் தான் கடைத்திருப்பன் என நாடகமாடி விட்டு எடுங்க தேடாட்டி இருங்க நான் கண்டிப்பா தேடுவேன என கூறுகிறார்.

அதேபோல் பரமு எங்கு செல்கிறான் என ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறார் தமிழ் ஏனென்றால் இவர்கள் ஏதோ நாடகமாடுகிறார்கள் என தமிழுக்கு தெரிய வருகிறது. இப்படியே ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்க பரம ஒரு கடையில் சென்று இட்டலி வாங்கிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் வாட்டர் பாட்டில் அனைத்தையும் வாங்கிக் கொண்டு செல்ல தமிழுக்கு சந்தேகம் வருகிறது உடனே பரமுவை பாலோ பண்ணுகிறார்கள்  இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.